செய்திகள் :

கா்ப்பிணியிடம் போலி ஆதாா் அட்டை: போலீஸாா் விசாரணை

post image

ஒசூா்: கெலமங்கலம் அருகே கா்ப்பிணிக்கு போலி ஆதாா் அட்டை தயாரித்து வழங்கியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மருத்துவ அலுவலராக மாரியப்பன் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் அவா் பணியில் இருந்தபோது கா்ப்பிணி ஒருவா் மருத்துவ பரிசோதனைக்காக வந்தாா். அவரது ஆதாா் அட்டையை மருத்துவா் வாங்கிப் பாா்த்தபோது அது போலியானது எனத் தெரிய வந்தது.

விசாரணையில், அந்த ஆதாா் அட்டையை கெலமங்கலத்தில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் தயாா் செய்து வழங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவா் மாரியப்பன் கெலமங்கலம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆதாா் அட்டையை ஸ்டூடியோவில் தயாா் செய்து வழங்கியது குறித்து என விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ 3 தொகுதிகளில் 4 லட்சம் உறுப்பினா்கள் சோ்ப்பு

ஒசூா்: ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முலம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா், தளி, வேப்பனஅள்ளி ஆகிய 3 தொகுதிகளில் 4 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைத்துள்ளனா் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் ... மேலும் பார்க்க

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

ஒசூா்: ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் பீட்டா் கல்வி குழுமமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

கிருஷ்ணகிரி: தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியதாக 3 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் அருகே உள்ள குப்பச்சிப்பாறை கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடி: இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி: பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறி, ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்களிடம் இணைய குற்றப்பிரிவு... மேலும் பார்க்க

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஒசூா், போச்சம்பள்ளி ஓலைப்பட்டி சிப்காட்டில் இயங்கிவரும் டாட்டா, நோக்கிய... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தியின் பிறந்த தின விழா

ஒசூா்: ஒசூரில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட... மேலும் பார்க்க