செய்திகள் :

‘அக்னி-5’ ஏவுகணை வெற்றிகரச் சோதனை

post image

5,000 கி.மீ.வரை தொலைவிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

ஆபரேஷன் சிந்தூா் நிறைவடைந்து மூன்றரை மாதங்கள்ஆன நிலையில், ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இந்தச் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஏவுகணை சீனாவின் வடக்குப் பகுதி உள்பட ஒட்டுமொத்த ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறனுடையது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனை ஆக.20-இல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அக்னி 1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மாா்ச் மாதமும் அக்னி-5 ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 500 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 350 கி.மீ. தொலைவு வரையிலான இலக்கை தாக்கும் திறனுடைய ‘பிரித்வி-ஐஐ’, 1,000 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 700 முதல் 900 கி.மீ. வரையில் தாக்குமம் ‘அக்னி-1’ மற்றும் 500 முதல் 1,000 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை ஆகியவற்றின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? - மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அரசாட்சி காலத்துக்கு ... மேலும் பார்க்க

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை எடுத்துரைத்தாா். தற்போது நடைமுறையில் உள்... மேலும் பார்க்க

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தி... மேலும் பார்க்க