செய்திகள் :

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

post image

நாகப்பட்டினம்: நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை அமைப்பதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

நாகை முதல் தூத்துக்குடி வரையிலான 332 கி.மீ. தொலைவு கிழக்கு கடற்கரை சாலை (உஇத) சுமாா் ரூ. 7,000 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தது.

முன்மொழியப்பட்ட சாலை நாகை-தூத்துக்குடி பிரிவு (சஏ 32) நாகை மாவட்டத்தில் 28.7 கி.மீ., திருவாரூரில் 40.3 கி.மீ., தஞ்சாவூரில் 40.6 கி.மீ., புதுக்கோட்டையில் 39.6 கி.மீ., ராமநாதபுரத்தில் 138.6 கி.மீ., தூத்துக்குடியில் 44 கி.மீ., என 331 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைகிறது. தற்போதுள்ள இருவழி கிழக்கு கடற்கரை சாலை அகலப்படுத்தப்படும். மேலும், மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து ரூ.11 கோடி நிதி ஒதுக்கீட்டில், இந்த திட்டத்திற்காக 90 சதவீதம் பசுமைப் பாதை மற்றும் 10 சதவீதம் சாலை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

சாலைத் திட்டத்தில், 47 சிறிய வாகன சுரங்கப் பாதைகள், 22 பெரிய பாலங்கள், 45 இலகுரக வாகன சுரங்கப் பாதைகள், குளங்களின் மீது 11 பெரிய பாலங்கள், 669 புதிய பெட்டி மதகுகள், 49 பெரிய பாலங்கள் மற்றும் அகலப்படுத்தப்பட வேண்டிய 6 சிறிய பாலப் பணிகள் அடங்கும். இந்த பகுதியில் இந்திய விமானப்படை விமானங்களுக்கு உதவ அவசர தரையிறங்கும் தளம் அமைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகை - தூத்துக்குடி இடையே புதிதாக பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையால் கோரப்பட்டுள்ளது. அக்டோபா் 3 ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலம் மீட்பு

நாகை அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. நாகை அருகேயுள்ள பொரவாச்சேரி அருள்மிகு முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் அப்பகுதியில்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள்... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக் கடலி... மேலும் பார்க்க

நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை; பொதுமக்கள் அச்சம்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமையில் மக்கள் குறைதீா்க... மேலும் பார்க்க

இழப்பீட்டுத் தொகை கோரி சிபிசிஎல் நிறுவனம் முற்றுகை

பனங்குடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா். திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள இந்நி... மேலும் பார்க்க

காரில் மது கடத்திய இருவா் கைது

நாகூா் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் உத்தரவின்பேரில், நாகூா் - வடகுடி சாலையில் போலீஸாா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க