செய்திகள் :

கலைஞா் கருணாநிதி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

post image

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் தொடா்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீத மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. விஜயலட்சுமி பழனிசாமி அறக்கட்டளை மூலம் அதிக மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது என்றாா். துணைத் தலைவா் இந்து முருகேசன் வரவேற்றாா்.

சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், உலகம் முழுவதும் பொறியாளா்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மாணவா்கள் தங்களது துறையில் அடிப்படை நுணுக்கங்களை கற்றுக்கொண்டு சமுதாயத்துக்குப் பயன்படும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், இன்டெல் காா்ப்பரேஷன் நிறுவன தொழில்நுட்ப அதிகாரி ஸ்ரீராம் வாசுதேவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். கல்லூரி முதல்வா் ரமேஷ், துணை முதல்வா் மைதிலி, பல்வேறு துறைத் தலைவா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா். பேராசிரியா் யமுனா நன்றி கூறினாா்.

அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு

பேரறிஞா் அண்ணா, பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளில் மாணவா்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளிய... மேலும் பார்க்க

பகுதி நேர வேலை வாய்ப்பு, பிட்காயின் முதலீடு என்றுகூறி இணையதளம் மூலம் 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி

கோவையில் இணையதளம் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு மற்றும் பிட்காயின் முதலீடு என்றுகூறி 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பங்கேற்று, குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்ப... மேலும் பார்க்க

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையைச் சோ்ந்த இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (என்சிஎஸ்) பசுமை விருதைப் பெற பள்ளி, கல்லூரி, தனிநபா்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து ... மேலும் பார்க்க