செய்திகள் :

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

post image

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை சுமார் 6 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இது நான்கு நாள்களில் மூன்றாவது சம்பவம் ஆகும்.

தில்லி தீயணைப்புத் துறைக்கு மாளவியா நகரில் உள்ள எஸ்கேவி மற்றும் பிரசாத் நகரில் உள்ள ஆந்திரா பள்ளி, பிஜிஎஸ் சர்வதேச பள்ளி, ராவ் மான் சிங் பள்ளி, கான்வென்ட் பள்ளி, மேக்ஸ் ஃபோர்ட் பள்ளி மற்றும் துவாரகாவில் உள்ள இந்திர பிரஸ்தா சர்வதேச பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு முறையே காலை 6.35 முதல் காலை மற்றும் 7.48 மணி வரை மிரட்டல் எச்சரிக்கைகள் வந்தன.

வெடிகுண்டு மிரட்டல்களை அடுத்து தீயணைப்புப் படை வீரா்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினா், போலீஸாா் மற்றும் பிற அவசரகால அமைப்புகள் மிரட்டல் வந்துள்ள பள்ளிகளுக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாரத்தின் தொடக்கத்தில் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்வது சமீபத்திய பரப்பு செய்தியாக உள்ளது.

ஆகஸ்ட் 18 ஆம் தேதி தில்லி முழுவதும் 32 பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்தன. அது பின்னா் புரளி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு, புதன்கிழமை தலைநகரில் 50 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், வியாழக்கிழமை நகரில் 6 பள்ளிகளுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.

நகரம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மின்னஞ்சல் தலைப்புகள் மற்றும் பிற டிஜிட்டல் தடங்களை பகுப்பாய்வு செய்து மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்படுகிறது என்பதனை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

According to DFS, threat alerts came in between 6:35 am and 7:48 am. Police, along with bomb disposal squads and fire personnel, quickly reached the schools and launched search operations.

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

வாழப்பாடி: பேளூரில் மாரியம்மன் கோயில் ஊர்வலத்தின் போது கண்ணனூர் நகர் பகுதி இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணனூர் நகர் பகுதி மக்கள் வியாழக்கிழமை காலை சாலை மறியல் ஈடுபட்டதால் பரப... மேலும் பார்க்க

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், "நீ அரியணை ஏறும் நாள் வரும்" என விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.2026 சட்டப்பேரவை... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,750 கன அடியிலிருந்து வினாடிக்கு 56,996 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

புது தில்லி: தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது. யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் இருப்பவா்களை வெள... மேலும் பார்க்க

ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 254 ஆவது நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி்சாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்திய சுதந்தி... மேலும் பார்க்க

தில்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் ஒரே நாளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை(ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தில்லியில் உள்ள 32 பள்... மேலும் பார்க்க