செய்திகள் :

மும்பை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்; அந்தரத்தில் உயிருக்கு போராடிய பயணிகள்; கிரேன் மூலம் மீட்பு

post image

மும்பை மோனோ ரயில்

மும்பையில் செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை மோனோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த ஒரு மோனோ ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த மோனோ ரயில் ஒரு சிமெண்ட் பீம் மீது அந்தரத்தில் பயணிக்கும். மோனோ ரயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத காரணத்தால் மிகவும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

மும்பை மோனோ ரயில் - மீட்பு பணி
மும்பை மோனோ ரயில் - மீட்பு பணி

கனமழை

மும்பையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புறநகர் ரயில் சேவை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

இதனால் பயணிகள் ரயில் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்தனர். அதோடு மோனோ ரயிலில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்தனர்.

அதிகமான பயணிகள்

இதற்கு முன்பு எப்போதும் இந்த அளவுக்கு மோனோ ரயிலில் கூட்டம் இருந்ததில்லை.

ரயிலில் வழக்கத்தை விட 442 பயணிகள் அதிகம் இருந்தனர். இதனால் மோனோ ரயில் இழுக்க முடியாமலும் மின் தடையாலும் நடுவழியில் அந்தரத்தில் நின்றது. பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பயணிகள் திணறல்

பயணிகள் மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். ரயில் செம்பூர் மற்றும் பக்தி பார்க் இடையே நின்றது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாரும் உதவிக்கு வரவில்லை என்பதால், பயணிகள் சிலர் ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயன்றனர். அதற்குள் தீயணைப்பு துறையினரும், மோனோ ரயில் பராமரிப்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ரயிலில் ஏ.சி.வசதியும் துண்டிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மூடிய மோனோ ரயிலுக்குள் காற்று வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

மூச்சுத்திணறல், மயக்கம்

இரண்டு பயணிகள் மயங்கி விழுந்தனர். 6 பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே ஆம்புலன்சில் முதல் கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டது.

மோனோ ரயிலில் கிரேன் மூலம் ரயிலில் சிக்கி இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

நடுவழியில் நின்ற மோனோ ரயில் - மீட்பு பணி
நடுவழியில் நின்ற மோனோ ரயில் - மீட்பு பணி

மீட்பு பணிகள்

மூன்று மணி நேரம் இந்த மீட்பு பணிகள் நடந்தது. இரவு 9.30 மணிக்குத்தான் மீட்பு பணிகள் முடிந்தது. அதிர்ஷ்டவசமாக மீட்பு பணியின் போது எந்த பயணிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பயணிகளை ரயில் ஜன்னலை உடைத்து பத்திரமாக மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையம் விளக்கம்

இது குறித்து மும்பை மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில்,''அளவுக்கு அதிகமான கூட்டம் காரணமாக ரயிலின் எடை அதிகரித்தது.

ரயில் வழக்கமாக 104 டன் அளவுக்கு இழுவைத்திறன் கொண்டது. ஆனால் ரயிலில் எடை 109 டன்னாக அதிகரித்தது. இதனால் மின் விநியோகத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் நடுவழியில் நின்றுவிட்டது.

நடு வழியில் நின்ற மோனோ ரயிலை இழுக்க மற்றொரு ரயில் அனுப்பப்பட்டது. ஆனால் அளவுக்கு அதிகமான கூட்டம் காரணமாக நின்றுவிட்ட மோனோ ரயிலை இழுக்க முடியவில்லை. எனவே தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஏக்நாத் ஷிண்டே பேட்டி

இது குறித்து துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ''ஹார்பர் லைனில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் மோனோ ரயிலில் பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

அளவுக்கு அதிகமான கூட்டம் காரணமாக மோனோ ரயில் ஒரு பக்கமாக சாய்ந்தது. அதோடு மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது'' என்றார்.

மும்பை மோனோ ரயில் - மீட்பு பணி
மும்பை மோனோ ரயில் - மீட்பு பணி

இந்த சம்பவம் குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,''நான் ரயிலில் 1.45 மணி நேரம் இருந்தேன். அதிகாரிகளிடமிருந்து எந்த வித தொடர்பும் இல்லாததால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

ரயிலில் ஏ.சி.வசதியோ அல்லது மின்சாரமோ இல்லை என்பதால், சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயன்றனர்'' என்றார்.

"பயணிகள் அச்சம் அடைய தேவையில்லை. சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும்" என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே போன்று ஒரு முறை மோனோ ரயில் நடுவழியில் நின்றது.

விருதுநகர்: எரிந்து சாம்பலான வைக்கோல் கட்டுகள்; 4 மணி நேரத்திற்கு மேல் போராடிய வீரர்கள் |Photo Album

மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று... மேலும் பார்க்க

விருதுநகர்: பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்; 4 மணிநேரப் போராட்டம்; ரூ.14 லட்சம் நஷ்டம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் சாமிக்காளை. இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் வைக்கோல் கட்டுகளை விற்பனைக... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ரயில்கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்; இண்டர்லாக் சிஸ்டத்தால் விபத்திலிருந்து தப்பிய ரயில்!

ரயில் கேட்டை மூட சென்ற கோகோ பைலட்ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் வாலாந்தரவை ரயில் நிலையத்தை கடந்து வழுதூர் - பெரியபட்டிணம் செல்லும் வழியில் அமைந்துள்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: டூவீலர் மீது கார் மோதி விபத்து - தந்தை, மகள் உட்பட 3 பேர் பலியான சோகம்!

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(37). இவரது மனைவி உஷா(35). இவர்களின் மகள்கள் ரூபா(10), பாவ்யாஸ்ரீ(9). அறிவழகனின் சகோதரி மகள் தேஜாஸ்ரீ(4). அறிவழகன் தன் மனைவி உட்பட ... மேலும் பார்க்க

`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்பட்ட பெண் நெகிழ்ச்சி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவர் மனைவி யமுனா (வயது 54). பெட்டிக்கடையில் வைத்து லட்டரி சீட்டு மற்றும் வெற்றிலை வியாபாரம் செய்துவந்தார். வீட்டில் உள்ளவர்களுக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: யாரும் உதவ முன்வராத விரக்தி; இறந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற கணவர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் நடந்த விபத்தில் கியார்சி அமித் என்ற பெண் இறந்துபோனார். நாக்பூர் மற்றும் ஜபல்பூர் சாலையில் கியார்சியும் அவரது கணவர் அமித்தும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க