செய்திகள் :

`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்பட்ட பெண் நெகிழ்ச்சி

post image

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவர் மனைவி யமுனா (வயது 54). பெட்டிக்கடையில் வைத்து லட்டரி சீட்டு மற்றும் வெற்றிலை வியாபாரம் செய்துவந்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மூலிகை மருந்துகள் எடுப்பதற்காக பைக்கில் சென்றார். பின்னர் ஒரு ரப்பர் தோட்டத்திற்குள் சென்றார். அங்கு, மூலிகளை தேடியபடியே சென்ற அவர் பக்கச்சுவர் கட்டப்படாமல் பாழடைந்து கிடந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

இதற்கிடையே வீட்டை விட்டு சென்ற யமுனாவை நீண்ட நேரமாக காணாததால் வீட்டில் உள்ளவர்கள் அப்பகுதியில் தேடிச் சென்றனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கொட்டாரக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தியதில் கொட்டாரக்கரை உக்ரன்குந்நு பகுதியில் யமுனாவின் ஸ்கூட்டர் நின்றதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையட்டுத்து அப்பகுதியில் போலீஸார் தேடயும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

வலைகட்டி மீட்கப்பட்ட காட்சி

இந்த நிலையில் இரவு நேரத்தில் ரப்பர் தோட்டர்ருக்குள் யமுனாவின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சத்தம் வந்த திசையில் சென்ற போலீஸார் கிணற்றுக்குள் யமுனா கிடப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு சென்று கயிறு மூலம் கிணற்றில் இறங்கி, வலைகள் மூலமாக யமுனாவை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். காலை 11:30 மணி அளவில் கிணற்றுக்குள் விழுந்தவரை இரவு இரவு 11:30 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யமுனா

இதுகுறித்து யமுனா கூறுகையில், "ஸ்கூட்டரில் சென்ற நான் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டுடன் மூலிகைகளை தேடினேன். விறகுகள் மற்றும் இரும்பு ஷீட்டுகளும் கொண்டு கிணறு மூடப்பட்டிருந்தது. கவனிக்காமல் நான் ஷீட்டின் மீது மிதித்ததில் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டேன். நேராக கிணற்றில் விழுந்து பக்கவாட்டில் மோதியதில் முதுகில் அடிபட்டது. நல்லவேளை கிணற்றில் தண்ணீர் இல்லை. பலமுறை சத்தம்போட்டும் யாரும் வரவில்லை. கிணற்றுக்குள் கிடந்து இறந்துவிடுவேன் என நினைத்தேன். இப்போது எனக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மகாராஷ்டிரா: யாரும் உதவ முன்வராத விரக்தி; இறந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற கணவர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் நடந்த விபத்தில் கியார்சி அமித் என்ற பெண் இறந்துபோனார். நாக்பூர் மற்றும் ஜபல்பூர் சாலையில் கியார்சியும் அவரது கணவர் அமித்தும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க

'ரத்தன் டாடா மட்டும் இருந்திருந்தால்.!' - இழப்பீடு தாமதமாவது குறித்து அமெரிக்க வழக்கறிஞர்

கடந்த ஜூன் 12-ம் தேதி, குஜராத்தில் இருந்து இங்கிலாந்து கிளம்பி சென்ற ஏர் இந்திய விமானம் விபத்துகுள்ளாகியது.இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, 'தி AI-171 நி... மேலும் பார்க்க

Air India: MP-கள் பயணித்த விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறு; `அதிஷ்டத்தால் தப்பினோம்' - வேணுகோபால்

இந்திய அரசின் Air Corporations Act மூலம் தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், அதிக நட்டம் காரணமாக 2022 பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் தனியார்மயமாக்கி, டாடா சன்ஸ் குரூப்புக்கு விற்ற... மேலும் பார்க்க

சீனா: பயணியுடன் பள்ளத்தில் விழுந்த கார்; `ரோடோ டாக்ஸி சேவை' பாதுகாப்பானதா? - எழும் கேள்விகள்

தென்மேற்கு சீனாவில் பாய்டு நிறுவனத்தின் தானியங்கி அப்பல்லோ கோ 'ரோபோ டாக்ஸி' சேவையில் பயணம் செய்த ஒருவர் படுகுழிக்குள் விழுந்துள்ளார். சோங்கிங் என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், குழிக்குள் விழுந்த ப... மேலும் பார்க்க

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பு; வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - சாத்தூரில் சோகம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவர் வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வின் கா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உள்பட்ட நான்காம் எண் பீட் பகுதியான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள வருசநாடு சந்திப்பு மணிக்கட்டி பகுதியில் காட்... மேலும் பார்க்க