செய்திகள் :

`தொழிலதிபரிடம் ரூ.75 கோடி மோசடி' - நடிகை ஷில்பா ஷெட்டி மீது FIR பதிவு செய்த காவல்துறை

post image

நடிகை ஷில்பா ஷெட்டி - அவரின் கணவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார்.

தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``லோட்டஸ் கேபிடல் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் நடத்தி வருகிறேன். என் நிறுவனத்தில் கடன் முகவராகப் பணிபுரிந்தவர் ராஜேஷ் ஆர்யா நடிகை ஷில்பா ஷெட்டி என் நிறுவனத்தில் கடன் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும் ஷில்பாவை தனக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார்.

ஷில்பா ஷெட்டி , ராஜ் குந்த்ரா
ஷில்பா ஷெட்டி , ராஜ் குந்த்ரா

அதன் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியையும், அவரின் கணவர் ராஜ் குந்த்ராவையும், நான் சந்திக்க ராஜேஷ் ஆர்யா ஜூஹுவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார். அங்கு வந்த நடிகை ஷில்பாவும், ராஜ் குந்த்ராவும் அவர்களிடம் வீட்டு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆன்லைன் சில்லறை விற்பனை தளமான பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் போன்றவைகள் இருப்பதாகக் கூறினர். மேலும், இந்த சொத்துகளில் ஷில்பா ஷெட்டி நிறுவனத்தில் 87.61 சதவிகித பங்குகளை வைத்திருந்ததாகக் கூறினார்கள்.

எனவே, இருவரும் 12 சதவிகித வட்டியில் ரூ.75 கோடி கடன் கேட்டார்கள். நானும் கடனளிக்க ஒப்புக்கொண்டேன். அதே நேரம், மொத்தப் பணமும் நேரடியாக வழங்கினால் வரி விதிப்பு அதிகமாக இருக்கும் எனவும், அதனால் அவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்வதுபோல மூன்று பகுதியாக பணத்தை வழங்கவும் கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி, ஏப்ரல் 2015-ல் பங்கு சந்தை ஒப்பந்தத்தின் கீழ் ரூ.31.95 கோடி, செப்டம்பர் 2015-ல் துணை ஒப்பந்தத்தின் கீழ் ரூ.28.53 கோடி என தொடர்ந்து பணம் வழங்கினேன்.

ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா
ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா

இந்த நிலையில்தான் 2016-ம் ஆண்டு பெஸ்ட் டீல் டிவியின் இயக்குநர் பதவியை ஷில்பா ராஜினாமா செய்ததாக எனக்கு மின்னஞ்சல் வந்தது. காரணங்களைக் கேட்டபோது திருப்திகரமான பதிலை வழங்கவில்லை.

2017-ம் ஆண்டில் நிறுவனத்திற்கு எதிராக திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தேன். எனவே, என் பணத்தை மீட்க பலமுறை முயன்றும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, என் பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் புதன்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட தொகை ரூ.10 கோடியைத் தாண்டியதால் வழக்கு EOW-க்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Sandeepa Virk: `ரூ.40 கோடி மோசடி' ED ரெய்டில் இன்ஃப்ளூயன்சர் கைது - என்ன நடந்தது?

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பணமோசடி தொடர்பாக மும்பை, டெல்லியில் இரண்டு நாள்கள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண் தொழிலதிபர் சந்தீபா விர்க் பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னை... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி: `ரூ.200 கோடி முறைகேடு' வரி மோசடி வழக்கில் மேயரின் கணவர் கைது - என்ன நடந்தது?

மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகராட்சியில் உயர் அலுவலர்களின் பாஸ்வேர்டை பயன்ப... மேலும் பார்க்க

``ரூ.25 லட்சம் மோசடி'' - தயாரிப்பாளரை செருப்பால் அடித்த பாலிவுட் நடிகை.. என்ன நடந்தது?

பாலிவுட் நடிகை ருச்சி குஜார், `தயாரிப்பாளர் கரண் சிங் செளகான் என்பவர் ரூ.24 லட்சம் மோசடி செய்துவிட்டதாக' போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து மும்பை ஓசிவாரா போலீஸார் தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு... மேலும் பார்க்க

Chanda kochhar: `லஞ்சம் வாங்கியது உறுதி' - ICICI வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஊழல் அம்பலம்

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுத... மேலும் பார்க்க

உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல மாட்டிக்காதீங்க!

'கையில காசு இருக்கு, என் அக்கவுன்ட்ல காசு இல்லை... நான் உனக்குத் தந்துடுறேன்... உன் அக்கவுன்டல இருந்து நான் சொல்ற அக்கவுன்டுக்கு அனுப்புறியா?’, ‘உன்னோட அக்கவுன்டுக்குப் பணம் அனுப்புறேன்... ஃபிளைட் டிக... மேலும் பார்க்க

கரூர்: `பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ.5,000' -லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி - வேல்முருகன் தாம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா என்பவரின் பிறப்புச் சான்றிதழில் பெளத்ரா என்று தவறுதலாக இருப்பதற்கு பெயர் பிழை திருத்த... மேலும் பார்க்க