செய்திகள் :

``ரூ.25 லட்சம் மோசடி'' - தயாரிப்பாளரை செருப்பால் அடித்த பாலிவுட் நடிகை.. என்ன நடந்தது?

post image

பாலிவுட் நடிகை ருச்சி குஜார், `தயாரிப்பாளர் கரண் சிங் செளகான் என்பவர் ரூ.24 லட்சம் மோசடி செய்துவிட்டதாக' போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து மும்பை ஓசிவாரா போலீஸார் தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ருச்சி குஜார் தான் கொடுத்துள்ள புகாரில், ''கரண் சிங் செளகான் என்னிடம் முதன் முதலில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டார்.

அவர் தன்னிடம் இந்தி சீரியல் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும், அது சோனி டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதில் தன்னையும் இணை தயாரிப்பாளராக சேரும்படி கேட்டுக்கொண்டார். அவரது பேச்சை நம்பி கரண் சிங் செளகானின் கே ஸ்டூடியோ நிறுவனத்திற்கு 2023-24ம் ஆண்டில் பல்வேறு காலக்கட்டங்களில் 25 லட்சத்தை டிரான்ஸ்பர் செய்தேன்.

தயாரிப்பாளரை தாக்கிய நடிகை

இது தொடர்பாக அவர் தேவையான ஆவணங்களை அனுப்பி ஒப்பந்தமும் செய்து கொண்டார். ஆனால், கரண் சிங் செளகான் சொன்னபடி இந்தி சீரியல் தயாரிக்கவில்லை. நான் கொடுத்த பணத்தை கொண்டு So Long Valley என்ற படத்தை தயாரித்துள்ளதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

அப்படம் 27-ம் தேதி வெளியாவதாக கேள்விப்பட்டு நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் மிரட்டினார்'' என்று தெரிவித்தார்.

பணம் டிரான்ஸ்பர் செய்த வங்கி விபரங்களையும் ருச்சி போலீஸில் தாக்கல் செய்துள்ளார். So Long Valley படத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு திரையிட்டு காட்ட கரண் சிங் செளகான் திட்டமிட்டு இருப்பதாக ருச்சி குஜாருக்கு தெரிய வந்தது.

சினிபோலிஸ் தியேட்டரில் இப்படம் திரையிடப்பட இருந்தது. உடனே ருச்சி குஜார் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு போராட்டம் நடத்துவதற்காக சென்றார். அங்கு கரண் சிங் செளகானுடன் ருச்சி குஜாரும், அவருடன் வந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தயாரிப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய பேனர்களை கையில் வைத்தபடி போராட்டம் நடத்தினர். அவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ருச்சி குஜார் கோபத்தில் கரண் சிங் செளகானை அடிப்பதற்கு பதில் மற்றொரு தயாரிப்பாளரான மான் சிங் என்பவரை தனது செருப்பால் அடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Chanda kochhar: `லஞ்சம் வாங்கியது உறுதி' - ICICI வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஊழல் அம்பலம்

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுத... மேலும் பார்க்க

உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல மாட்டிக்காதீங்க!

'கையில காசு இருக்கு, என் அக்கவுன்ட்ல காசு இல்லை... நான் உனக்குத் தந்துடுறேன்... உன் அக்கவுன்டல இருந்து நான் சொல்ற அக்கவுன்டுக்கு அனுப்புறியா?’, ‘உன்னோட அக்கவுன்டுக்குப் பணம் அனுப்புறேன்... ஃபிளைட் டிக... மேலும் பார்க்க

கரூர்: `பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ.5,000' -லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி - வேல்முருகன் தாம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா என்பவரின் பிறப்புச் சான்றிதழில் பெளத்ரா என்று தவறுதலாக இருப்பதற்கு பெயர் பிழை திருத்த... மேலும் பார்க்க

Marakkaar Biryani: கிளைகள் தருவதாக 239 பேரிடம் ரூ.25 கோடி வசூல்.. மோசடி புகாரில் உரிமையாளர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் விரிவாக்கம் மகிழம்பூ நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் மகன் கங்காதரன் என்பவர் ட்ரூல் டோர் (கனவு காணுங்கள்) என்ற நிறுவனத்தின் கீழ் மரக்கார் பிரியாணி கடை ம... மேலும் பார்க்க

காலைச் சுற்றிய பாம்பாக கடன்கள், கண்டுகொள்ளாத அரசு / அமைப்புகள், இனியாவது விரைவான தீர்வு கிடைக்குமா?

இந்தியா, டிஜிட்டல் மயமாக்கலில் மிக வேகமாக முன்னேறிவருகிறது. ஆனால், தனிநபர்களின் தரவுகளைப் பாதுகாத்தல், தரவுகளைச் சரிபார்த்தல், போலி தரவுகளை அடையாளம் கண்டு நீக்குதல் போன்றவற்றில் இன்னமும் பின்தங்கியே இ... மேலும் பார்க்க

AI உதவியால் ரூ.10 லட்சம் கடனை முடித்த பெண் - நீங்களும் இப்படிச் செய்யலாம்!

ஒவ்வொரு நபரும் நிதிச் சுதந்திரத்தை நோக்கிச் செல்வதற்குத் தடையாக இருப்பது கடன்கள்தான். மாதம் தோறும் பணத்தைச் சேமிக்கக்கூட விடாமல் கடன்கள் தடுக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியக்... மேலும் பார்க்க