செய்திகள் :

Marakkaar Biryani: கிளைகள் தருவதாக 239 பேரிடம் ரூ.25 கோடி வசூல்.. மோசடி புகாரில் உரிமையாளர் கைது

post image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் விரிவாக்கம் மகிழம்பூ நகரைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவர் மகன் கங்காதரன் என்பவர் ட்ரூல் டோர் (கனவு காணுங்கள்) என்ற நிறுவனத்தின் கீழ் மரக்கார் பிரியாணி கடை மூலம் கிளைகள் அமைப்பதற்கும், அந்தக் கிளையில் நடக்கும் வியாபாரத்திற்கு ஏற்றார் போல் 10% கமிஷன் தருவதாகவும், கடைக்கு உண்டான வாடகை, வேலை ஆட்கள் நாங்களே வழங்குகின்றோம் என்று சின்னத்திரை நடிகர்களை வைத்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.

ட்ரூல் டோர்

இந்த விளம்பரத்தைப் பார்த்து கங்காதரனை தொடர்பு கொண்ட 239 நபருக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.25 கோடிக்கு மேலாக வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கங்காதரன் மற்றும் அவரது மனைவி தேவதாஸ் மரியநாயகம், அருப்புக்கோட்டையை சேர்ந்த நிர்வாக இயக்குநர் ராம்குமார், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம், திருமங்கலம் கப்பலூர் சதீஷ்குமார் மற்றும் ராணிப்பேட்டை சீக்கராஜபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்ற ஏ.சி. பிரவீன் ராவ் இவர்கள் கூட்டாக சதி செய்து ஐந்து மாநிலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏஜெண்டுகள் தேர்வு செய்து சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேல் நூதன மோசடி செய்தாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட 239 பேரும் மரக்கார் பிரியாணி கிளை துவங்க 5 லட்சத்து 18 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்து, இதற்கு உண்டான கடை தாங்களே தயார் செய்து வைத்துள்ளனர். இந்த கிளைக்கான ஒப்பந்தத்தை 100 ரூபாய் பத்திரத்தில் 239 பேருக்கும் கங்காதரன் கையெழுத்திட்டு வழங்கியிருக்கிறார்.

மரக்கார் பிரியாணி உரிமையாளர் கங்காதரன்

முதற்கட்டமாக 21 கடைகளை மட்டும் திறந்து வைத்து வியாபாரத்தை தொடங்கிய சில மாதத்திலேயே அந்த கடைகளுக்கான எந்த ஒரு நிதிப்பங்கும் வழங்காத நிலையில் கடையின் உரிமையாளர்கள் கடை நடத்த முடியாமல் கடையை மூடியுள்ளனர்.

மற்றும் உள்ள 228 பேருக்கு கடை தொடங்குவதற்கான எந்த ஒரு பணியையும் கங்காதரன் செய்யவில்லை என பணம் வழங்கிய கிளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

கங்காதரனை தொடர்பு கொண்டு தாமதத்திற்கான காரணத்தை அறிய முற்பட்டபோது பதிலும் அளிக்காமல் பணத்தையும் திருப்பி அளிக்காமல் இழுத்தடித்ததாகவும், பல காரணங்களை கூறியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பின் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கிளை உரிமையாளர்கள் அந்தந்த காவல் நிலையங்களிலேயே புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகர் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவில் குற்றவழக்கு பதியப்பட்டு ஜூன் 20 அன்று பிரவீன் ராவ், சதீஷ்குமார், சண்முகசுந்தரம் ஆகியோர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்

இதற்கிடையில் முன்னரே கங்காதரனின் மனைவி தேவதாஸ் மரியநாயகம் சரணடைந்த நிலையில், இன்று காலை கங்காதரன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

தற்போது கங்காதரனிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தபடியாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து மோசடிக்கான காரணங்களையும் பணத்தை திரும்பி பெறுவதற்கான வழியையும் காவல்துறை மேற்கொள்ளும் என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

பகுருதீன்

கிளை துவங்குவதற்காக பணம் கட்டி பாதிக்கப்பட்ட நாகூரைச் சேர்ந்த பகுருதீன் கூறுகையில், “பிரியாணி கடையில் செய்த மோசடியை விட பெரிய மோசடியை செய்வதற்கு கங்காதரன் மற்றும் அவரது குழுவினர்கள் தயாராகி வருகின்றனர். மரக்கார் பிரியாணி தலைமை அலுவலகத்தில் கிச்சன் ஒன்று இருக்கிறது. அதில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளுக்கான விளம்பரங்கள் உள்ளது. எடுத்துக்காட்டாக தற்போது கேத்தல் காபி, வந்தனம் காபி போன்ற சில கிளைகளை துவங்கியுள்ளனர்.

இதற்கிடையில், பிரியாணி கடையில் பிரச்னை ஏற்பட்டதால் இந்த கிளைகளை துவங்குவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்களைப் போன்றவர்கள் இவர்களிடம் கிளை அமைத்து தருவதற்காக பணம் தந்து ஏமாற வேண்டாம் எனவும், காவல்துறை விரைந்து இவர்களிடமிருந்து எங்களது பணத்தை மீட்டுத் தரவும் நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்” என்றார்.

காலைச் சுற்றிய பாம்பாக கடன்கள், கண்டுகொள்ளாத அரசு / அமைப்புகள், இனியாவது விரைவான தீர்வு கிடைக்குமா?

இந்தியா, டிஜிட்டல் மயமாக்கலில் மிக வேகமாக முன்னேறிவருகிறது. ஆனால், தனிநபர்களின் தரவுகளைப் பாதுகாத்தல், தரவுகளைச் சரிபார்த்தல், போலி தரவுகளை அடையாளம் கண்டு நீக்குதல் போன்றவற்றில் இன்னமும் பின்தங்கியே இ... மேலும் பார்க்க

AI உதவியால் ரூ.10 லட்சம் கடனை முடித்த பெண் - நீங்களும் இப்படிச் செய்யலாம்!

ஒவ்வொரு நபரும் நிதிச் சுதந்திரத்தை நோக்கிச் செல்வதற்குத் தடையாக இருப்பது கடன்கள்தான். மாதம் தோறும் பணத்தைச் சேமிக்கக்கூட விடாமல் கடன்கள் தடுக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியக்... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி: வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு; மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மீது புகார்

மாநகராட்சிக்கு ரூ 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்படுத்தி வரி விதிப்பில் மோசடி செய்த புகாரில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... மேலும் பார்க்க

Cyber ​​crime: ``டிஜிட்டல் கைது'' - 70 வயது மருத்துவரை மிரட்டி ரூ.3 கோடி பறித்த கும்பல்

இணையத்தள குற்றவாளிகள் நாடு முழுவதும் தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து பல்வேறு வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். அதோடு பணமோசடி புகாரை காரணம் காட்டி டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்த... மேலும் பார்க்க

"வைரங்கள், ரூ.10 லட்சம்.." - ஒரு தொலைபேசி அழைப்பில் சிதைந்துபோன பெண்ணின் வாழ்க்கை!

மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் பகுதியில் ஆஷா பணியாளராக புஷ்பலதா என்ற பெண் பணியாற்றி வந்திருக்கிறார். தனது இரண்டு குழந்தைகளை நிர்வகித்தும் கணவரை ஆதரித்தும் வந்துள்ளார் புஷ்பலதா. சிறு சிறு வேலைகளை செய்து ... மேலும் பார்க்க

Google Pay: 112 பேரிடம் கூகுள் பே மூலம் நூதன மோசடி - கோவையை அதிர வைத்த காதல் தம்பதி

கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சக்திவேலின் கடைக்கு ஒரு இளம் தம்பதி சென்றுள்ளனர். தொடர... மேலும் பார்க்க