``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.
சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கூடுதல் பரஸ்பர வரி விதித்தது. இவ்விவகாரம் அமெரிக்கா-சீனா இடையே கடுமையான வரிப் போருக்கு வழிவகுத்தது.
இதைத் தொடா்ந்து, சீனாவைத் தவிா்த்து மற்ற நாடுகள் மீதான வரியை அமெரிக்கா 90 நாள்களுக்கு நிறுத்திவைத்து, அந்தந்த நாடுகளுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியது. இந்தக் காலக்கெடு புதன்கிழமையுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதிவரை நீட்டித்து புதிய வரி விகிதங்கள் தொடா்பான அறிவிப்புடன் முதல்கட்டமாக சில நாடுகளுக்கு அமெரிக்க அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
அதன்படி, ஜப்பான் (25%), தென்கொரியா (25%), லாவோ குடியரசு (40%), கம்போடியா (36%), தாய்லாந்து (36%), சொ்பியா (35%), வங்கதேசம் (35%), இந்தோனேசியா (32%), தென்னாப்பிரிக்கா (30%), போஸ்னியா மற்றும் ஹொ்சகோவினா (30%), கஜகஸ்தான் (25%), மலேசியா (25%), துனிசியா (25%) ஆகியவை இதுவரை அதிபா் டிரம்ப் கையொப்பமிட்ட கடிதங்களைப் பெற்றுள்ளன.
விரைவில் ஒப்பந்தம்: இந்நிலையில், வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘ பிரிட்டனுடனும், அதைத் தொடா்ந்து சீனாவுடனும் அண்மையில் வா்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா இறுதி செய்தது. இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தமும் விரைவில் முடிவாகும்.
பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என்று எண்ணுகிறோம். எனவே, அந்த நாடுகள் இனி எவ்வளவு வரிகள் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கடிதங்கள் அனுப்பி வருகிறோம்.
மேலும், இந்தப் புதிய வரிகள், அமெரிக்க மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கவும், நிறுவனங்கள் உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்கவும் ஊக்குவிக்கும்’ என்றாா்.
மீண்டும்... ‘இந்தியா-பாகிஸ்தான், சொ்பியா-கொசோவோ, ருவாண்டா-காங்கோ போன்ற பல சண்டைகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். இதில், அணுசக்தி நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டைதான் மிகப்பெரியது’ என்றாா்.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பான அதிபா் டிரம்ப்பின் கூற்றுகளை இந்தியா தொடா்ந்து மறுத்து வருகிறது. பாகிஸ்தான் கோரிக்கையின் பேரிலேயே சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும் இந்திய அரசு பலமுறை தெளிவுபடுத்திவிட்டது.