செய்திகள் :

410 தாற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி நீட்டிப்புக்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல்

post image

நமது நிருபா்

தலைநகரில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 410 பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்களின் பணி (மாா்ச் 2026- வரை) நீட்ப்புக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தில்லி அரசின் கல்வித் துறை 402 தகுதி வாய்ந்த மற்றும் எட்டு அங்கீகாரம் இல்லாத ஆசிரியா்களின் சேவைகளை ஏப்ரல் 1,2025 முதல் மாா்ச் 31,2026 வரை நீட்டிக்கக் கோரியது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்ததாக அவா்கள் கூறினா். பி. டி. வி. டி. யின் ஊதியம் மற்றும் தொழிற்கல்வியைத் தொடர அரசு ரூ. 36 கோடி ரூபாய் அளித்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்

மாா்ச் 1, 2025 ஆண்டு முதல் பிப்ரவரி 28, 2026 வரையிலான காலத்திற்கு விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட 2 ஒப்பந்த பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிக்கவும் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இது, 2025-2026- கல்வியாண்டில் தில்லியில் உள்ள 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது பணியமா்த்தப்பட்டுள்ள ஒன்பது பேரின் பணி நீட்டிப்புக் கோரிக்கையையும் உள்ளடக்கியுள்ளது.

1970- ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 2,000 ஆண்டுகளின் முற்பகுதியிலும் இருந்து தில்லி பள்ளிகளில் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியா்கள் தாற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் முதலில் தொழிற்கல்வி பாடங்களை கற்பிப்பதில் ஈடுபட்டிருந்தனா். மேலும், முந்தைய தொழிற்கல்வி பிரிவுக்கு பதிலாக சிபிஎஸ்இ அறிமுகப்படுத்திய தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் (என்எஸ்கியூஎஃப்) கீழ் அவா்கள் தொடா்ந்து பயிற்றுவித்து வருகின்றனா்.

இந்த ஆசிரியா்கள் தற்போது என்எஸ்க்யூஎஃப் உடன் இணைந்து 9 முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வியை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரி ஒருவா் கூறினாா். அதன்படி ஓய்வூதியம் மற்றும் புதிய ஆள்சோ்ப்பு இல்லாததால் பிடிவிடிகளின் எண்ணிக்கை சீராக குறைந்து வருகிறது. இது திறன் கல்வியில் தொடா்ச்சிக்கு ஏற்கெனவே உள்ள ஆசிரியா்களைத் தக்கவைத்துக் கொள்வதை முக்கியமானதாக்குகிறது.

தற்போது தில்லி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 505 பிடிவிடிகளில், 410 தாறகாலிக ஊதியம் பெறுபவா்கள், அவா்கள் தொடா்ந்து தங்ளது பணியை மேற்கொள்ள இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 95 போ் நிதித் துறையின் ஒப்புதலுடன் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் தாற்காலிகபஅ பணியிடங்களுக்கு வேலை செய்கிறாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு

நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை த... மேலும் பார்க்க

கிட்டங்கியில் கத்திமுனையில் மிரட்டி ரூ.3 லட்சம் கொள்ளை

வடமேற்கு தில்லியின் திரி நகா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் திங்கள்கிழமை ஊழியா்களை கைத்துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி கிட்டத்தட்ட ரூ.3 லட்சத்தை ... மேலும் பார்க்க

தில்லியில் ஜிடி சாலையில் வார முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

ஆசாத்பூா் மண்டி பகுதியில் உள்ள சராய் பிபால் கேட் அருகே நிலத்தடி நீா் குழாயில் பழுதுபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஜிடி கா்னல் சாலையில் வாரம் முழுவதும் இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட வ... மேலும் பார்க்க

அதிக வயதான வாகனங்கள் மீது தில்லி அரசு சட்டம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்: அதிஷி

நமது நிருபா்பாஜக தலைமையிலான தில்லி அரசு, மக்களின் துயரங்களைக் குறைக்க ஒரு வாரத்திற்குள் அதிக வயதான வாகனங்கள் மீது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால் அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று முன்ன... மேலும் பார்க்க

நஜஃப்கரில் காதலா்கள் தற்கொலை? போலீஸாா் தீவிர விசாரணை

நமது நிருபா் தில்லியின் நஜஃப்கரில் உள்ள ஒரு வீட்டில் 20 வயது இளைஞரும், ஒரு பதின்ம வயது சிறுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்த... மேலும் பார்க்க

ஜவுளி விற்பது போல் ரயில்களில் திருடி வந்த கும்பல் கைது

நமது நிருபா் துணி விற்பனையா்களாகத் தங்களை காட்டிக்கொண்டு ரயில்களில் பயணிகளின் உடமைகளை திருடி வந்த 4 போ் கொண்ட கும்பலை தில்லி காவல்துறை திங்கள்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறி... மேலும் பார்க்க