செய்திகள் :

"நாம் உலகின் குழந்தைகள்" - குடும்பப் பின்னணியை அறிய DNA பரிசோதனை; பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

post image

பிரான்ஸில் பிறந்து, போர்த்துகீசிய பெற்றோரால் வளர்க்கப்பட்ட கேட் என்ற பெண், சிறிய வயதிலிருந்தே தன்னைக் குடும்பத்தில் ஒரு வித்தியாசமானவராக உணர்ந்திருக்கிறார்.

@juust_kate என TikTok-இல் அழைக்கப்படும் கேட், தனது குடும்பத்தைப் பார்த்தால் தன்னைப் போல யாரும் இல்லையென்று நினைத்து, குடும்ப பின்னணியை அறிய டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

இதன் முடிவுகள் அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டன. குழந்தைப் பருவத்திலிருந்தே பண்டைய எகிப்து நாகரிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கேட், தனது தோற்றம் குறித்து மக்கள் அடிக்கடி கேள்வி எழுப்பியதால், தனது பாரம்பர்யத்தை அறிய ஆர்வமடைந்தார்.

dna test
dna test

இதனையடுத்து டி.என்.ஏ பரிசோதனை செய்த கேட், ஆறு வாரங்களுக்குப் பிறகு முடிவுகளைப் பெற்றிருக்கிறார். முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் கேட். 58.4% எகிப்திய, 22.9% போர்த்துகீசிய, 14.1% இத்தாலிய, மற்றும் 4.6% அல்ஜீரியப் பாரம்பர்யம் என முடிவுகள் வந்துள்ளன.

85% போர்த்துகீசிய வம்சாவளியை எதிர்பார்த்த கேட்டுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தனது தாயிடம் இதுகுறித்து விசாரித்தபோது, "நாம் அனைவரும் உலகின் குழந்தைகள்" என்று பதிலளித்திருக்கிறார்.

சில மாதங்கள் கழித்து மீண்டும் தாயிடம் கேட் விசாரித்தபோது, கேட்டை வளர்த்தவர் அவரது உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்தது. அவரது உண்மையான தந்தை ஒரு எகிப்தியர், அவர் ஏற்கனவே மறைந்திருக்கிறார்.

இந்த உண்மை அந்தப் பெண்ணுக்கு உணர்வுப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், எகிப்தில் மூன்று சகோதரர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் உறவை வளர்த்துள்ளார்.

இந்தப் புதிய குடும்ப இணைப்பு அவருக்கு மகிழ்ச்சியையும், புதிய கலாசார தொடர்பையும் வழங்கியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியுமா?

”ஒரு மனிதன் நோயாளியாக இறப்பதற்கு முன், அவருக்கு மருந்துகள் மட்டும் போதாது.. நேசம், நம்பிக்கை, கருணை போன்ற மனித உணர்வுகளும் அவசியம்” என்று கூறுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர் பெலிண்டா மார்க்ஸ் எ... மேலும் பார்க்க

பீகார்: நாகப்பாம்பைப் பிடிக்க முயன்ற பாம்பு பிடி வீரர் பலியான சோகம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பீகார் மாநிலத்தில் பிரபல பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் பிரபல பாம்பு பிடி வீரராக இருப்பவர் ஜே.பி.யாதவ். பல வரு... மேலும் பார்க்க

தொடர் பாலின துன்புறுத்தல்; தாலிபன் தலைவர்களுக்கு கைது வாரண்ட்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை தாலிபன்கள் துன்புறுத்துவதை எதிர்த்து நடவடிக்கை எடுத்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி), தாலிபன்களின் தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா மற்றும் ஆப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "தயாராகாத சாலைக்குக் கட்டணம்" - சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய ராஜ்தாக்கரே கட்சி

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி சமீப காலமாகத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. மராத்தி பிரச்னையில் வெளிமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் மாநகராட்சிக்குத் ... மேலும் பார்க்க

சீனா: அலுவலகமாக மாற்றிய நீச்சல் குளம்; தீயணைப்புத் துறையால் பின்வாங்கிய நிறுவனம்; பின்னணி என்ன?

சீனாவின் ஒரு அலங்கார நிறுவனமான லூபான் டெகோரேஷன் குழுமம் (Luban Decoration Group), தனது அலுவலகத்தை நீச்சல் குளத்தில் மாற்றியதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.ஏற்கனவே இருந்த அலுவலகத்தைப் பு... மேலும் பார்க்க

மராத்தி விவகாரம்: `என்னிடம் கேட்காமல் பேசக்கூடாது’ - நிர்வாகிகளுக்கு ராஜ் தாக்கரே வாய்ப்பூட்டு

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். மராத்தி பேசாத கடைக்காரர்களை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அ... மேலும் பார்க்க