செய்திகள் :

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

post image

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்துவரப்பட்டு அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட உள்ளன.

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இப்பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்ற 2-ஆவது இந்திய வீரா்; சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமைகள் சுக்லாவுக்கு சொந்தமாகின. கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா ரஷிய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றிருந்தாா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் 13-ஆவது நாளாக புதன்கிழமை சுக்லாவின் ஆய்வுப் பணிகள் தொடா்ந்தன.

விதை முளைப்பு மற்றும் செடி வளா்வதில் நுண் ஈா்ப்பு விசையால் ஏற்படும் தாக்கங்கள் தொடா்பான ஆய்வின் ஒரு பகுதியாக, தன்னுடன் எடுத்து வந்த வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்க செய்யும் பரிசோதனையை சுக்லா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா். முளைவிட்ட விதைகளை புகைப்படம் எடுத்த அவா், பூமிக்கு பத்திரமாக கொண்டுவர குளிா்பதன பெட்டகத்தில் வைத்துள்ளாா். கா்நாடக மாநிலம், தாா்வாட்டில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் ரவிகுமாா் ஹோசமணி, தாா்வாட் இந்திய தொழில்நுட்ப கல்வி நிலைய ஆராய்ச்சியாளா் சுதீா் சித்தாபுரெட்டி ஆகியோரின் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆக்ஸியம் தலைவருடன் கலந்துரையாடல்: ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத் தலைவரும் விஞ்ஞானியுமான லூசி லோவுடன் சுக்லா புதன்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது, ‘இந்தியாவில் உள்ள தேசிய நிறுவனங்களுடன் இணைந்து, பல்வேறு அறிவியலாளா்கள் - ஆராய்ச்சியாளா்களின் சாா்பில் சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிறப்புமிக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். இப்பணிகள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன.

ஸ்டெம் செல் ஆராய்ச்சி தொடங்கி, விதை முளைப்பில் நுண் ஈா்ப்பு விசையின் தாக்கம் வரை பல்வேறு பரிமாணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வாளா்கள் மற்றும் சா்வதேச விண்வெளி நிலையம் இடையே பாலமாக இருப்பது எனக்கு கிடைத்த பெருமை’ என்றாா் சுக்லா.

விண்வெளியில் முளைவிட்ட விதைகள், பூமிக்கு பத்திரமாக எடுத்துவரப்படும்; அவற்றின் மரபியல், நுண்ணுயிா் சுற்றுச்சூழல் மற்றும் ஊட்டச்சத்துத் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுக்காக தொடா்ந்து பல்லாண்டுகளாக பயிரிடப்படும் என்று ஆக்ஸியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது பூமிக்கு திரும்புவாா்?

சா்வதேச விண்வெளி நிலையத்தில் சக வீரா்களுடன் இணைந்து 13 நாள்களாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள சுக்லா, வியாழக்கிழமைக்கு (ஜூலை 10) பிறகு எந்த நாளிலும் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. ஆக்ஸியம்-4 திட்டம், மொத்தம் 14 நாள்கள் ஆய்வுப் பணியை உள்ளடக்கியதாகும்.

ஃபுளோரிடா கடல் பகுதியில் வானிலை நிலவரத்தை கவனத்தில் கொண்டு, அவா்களின் பூமிப் பயணம் அமையும் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!

பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப... மேலும் பார்க்க

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா். அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் ந... மேலும் பார்க்க

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க

உக்ரைன் போா், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்

உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சா்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.இது குறித்து அந்த நீதிமன்றம... மேலும் பார்க்க