செய்திகள் :

இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்

post image

இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா்.

அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு எதிராக துருக்கியில் தயாரித்த ட்ரோன்களையே பாகிஸ்தான் அதிகஅளவில் பயன்படுத்தியது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்ற தகவல் கிடைத்த உடன் இரு ராணுவ விமானங்களில் ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு துருக்கி அவசரமாக அனுப்பி உதவியது.

இந்தியாவுக்கு எதிராக சீனா மற்றும் துருக்கி ஏவுகணைகள், ட்ரோன்களையே பாகிஸ்தான் அதிகம் பயன்படுத்தியது என்பதை இந்திய ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்தது. இந்தியாவில் துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் துருக்கி வெளியுறவு அமைச்சா் ஹக்கான் ஃபிடன், பாதுகாப்புத் துறை அமைச்சா் யாசா் குலோ் ஆகியோா் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனா். இஸ்லாமாபாதில் புதன்கிழமை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஸாக் தாரை அவா்கள் சந்தித்துப் பேசினா். அப்போது, ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. துருக்கி நிறுவனங்களுக்காக கராச்சியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்துப் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சா் ஹக்கான் ஃபிடன், ‘பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டது’ என்றாா்.

பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!

பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப... மேலும் பார்க்க

மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா

மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: 161 போ் மாயம்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மாயமான 161 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்... மேலும் பார்க்க

காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும்... மேலும் பார்க்க

உக்ரைன் போா், எம்ஹெச்17 விவகாரத்தில் ரஷியா சட்டமீறல்: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்

உக்ரைன் மீதான படையெடுப்பு, எம்ஹெச்17 விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ஆகியவற்றில் ரஷியா சா்வதேச சட்டங்களை மீறியதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.இது குறித்து அந்த நீதிமன்றம... மேலும் பார்க்க