செய்திகள் :

பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!

post image

பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 1 வரை அமலுக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.

இந்த நிலையில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.

வரி விதிப்பு ஏன்?

பிரேசில் முன்னாள் அதிபரும் வலதுசாரியாளருமான போல்சனாரோவுக்கு எதிராக நடைபெறும் வழக்கை மேற்கோள்காட்டி டிரம்ப் வரி விதித்துள்ளார்.

கடந்த அதிபர் தேர்தலின்போது மோசடி செய்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நினைத்ததாக போல்சனாரோ மீது பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், பிரேசிலுக்கு ஆகஸ்ட் 1 முதல் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் லூலாவுக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்து, ”போல்சனோரோவுக்கு எதிரான விசாரணை நடக்கக்கூடாது, உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சில்வா பதில்

அமெரிக்க அதிபர் டிரம்பின் கடிதத்துக்கு பதிலளித்துள்ள லூலா எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:

”பிரேசில் சுதந்திரமான விசாரணை நிறுவனங்களுடைய இறையாண்மை கொண்ட நாடு. அது எவ்வித சமரசத்தையும் ஏற்காது.

ஆட்சி கவிழ்ப்பைத் திட்டமிட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை பிரேசிலின் நீதித்துறை அதிகார வரம்புக்குள் மட்டுமே வருகின்றன. நீதித்துறை சுதந்தரமாக செயல்படக்கூடியவை. எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டவை அல்ல.

பிரேசிலில் கருத்து சுதந்திர ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை நடைமுறைகள் எடுபடாது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்து பிரேசில் சட்டத்துக்கு உட்பட வேண்டும்.

அமெரிக்காவுடன் கடந்த 15 ஆண்டுகளில் 410 பில்லியன் டாலர் வர்த்தகத்தை பிரேசில் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசின் புள்ளிவிவரங்களே காட்டுகின்றன. வரி அதிகரிப்பை பிரேசிலின் பொருளாதார சட்டத்தின்படி எதிர்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Brazilian President Luiz Inacio Lula da Silva has responded to US President Donald Trump's threat to impose a 50 percent tariff on Brazil.

இதையும் படிக்க :தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க

கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கடல் பரப்... மேலும் பார்க்க