செய்திகள் :

Ahmedabad Plane Crash: 'அது சரியாக வேலை செய்யவில்லை; காரணம்...' - முதல்கட்ட அறிக்கை சொல்வது என்ன?

post image

அகமதாபாத் விமான விபத்தின் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது விமான விபத்து விசாரணைப் பணியகம்.

அந்த அறிக்கையில், "விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இரு இன்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிவாயு நின்றுள்ளது. அதனால், விமானத்தின் இரு இன்ஜின்களும் செயல்பாட்டை இழந்துள்ளன. அவசரக்கால உதவியாக, ராம் ஏர் டர்பைன் (Ram Air Turbine) செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.

விமானிகளின் முயற்சி

ஆனால், மீண்டும் சில நொடிகளில் இன்ஜின்களுக்கு எரிவாயு செல்ல தொடங்கியிருக்கிறது. இது விமானிகள் பிரச்னையை சரிசெய்ய முயன்றதைக் காட்டுகிறது.

த்ரஸ்ட் லீவர் மற்றும் எரிவாயு கட்டுப்பாட்டு ஸ்விட்ச்
த்ரஸ்ட் லீவர் மற்றும் எரிவாயு கட்டுப்பாட்டு ஸ்விட்ச்

எரிவாயுப் பிரச்னை சரியானதும், விமானிகள் இன்ஜினை மீண்டும் செயலாக்கத்திற்குக் கொண்டுவர முயன்றுள்ளனர். முதல் இன்ஜின் ஓரளவு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால், இரண்டாம் இன்ஜின் சரியாகவில்லை.

அவர்கள் ஏற்கனவே குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால், இரு இன்ஜின்களும் முழுமையான செயல்பாட்டைத் தொடங்கி, உயரப் பறப்பதற்கான நேரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

லீவர் மற்றும் இன்ஜின் கட்டுப்பாட்டு சிஸ்டம் இடையேயான சிக்கல்

Thurst lever - காக்பிட்டில் உள்ள விமானிகள் இயக்குவதாகும். இதை இயக்குவதன் மூலம், இன்ஜினின் சக்தி உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும்.

இது விபத்தான விமானத்தில் குறைந்த லெவலிலேயே இருந்துள்ளது. விமானத்தைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர, த்ரஸ்ட் லீவரைக் குறைந்த திறனுக்கு விமானிகள் வைத்துள்ளனர்.

ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை. காரணம், லீவர் மற்றும் இன்ஜின் கட்டுப்பாட்டு சிஸ்டமிற்கு இடையே துண்டிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Ahmedabad Plane Crash: 'ஏர் இந்தியா இந்த ஆய்வைச் செய்யவில்லை' - முதல்கட்ட அறிக்கை தகவல்

கடந்த ஜூன் 12-ம் தேதி, அகமதாபாத்தில் போயிங் 747 விமான விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்திற்கான முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.எரிவாயுவில் எதாவது பிரச்னையா? விமானத்தில் இருந்து எரிவாயு சுத்தமா... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது முதல்கட்ட அறிக்கை

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 747 விமான விபத்து கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது. இதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தின் ஆய்வு செய்... மேலும் பார்க்க

Gaur: ``மனித தவறுகளால் மரண வேதனையில் துடிக்கும் காட்டுமாடுகள்'' - வனத்துறை சொல்வதென்ன?

ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமாக அறியப்படும் இந்திய காட்டுமாடுகளின் (Indian Gaur) எண்ணிக்கை நீலகிரியில் கணிசமாக காணப்படுகின்றன. வனங்களில் அந்நிய களைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் மற்றும் வழித்தட... மேலும் பார்க்க

கோத்தகிரி: நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறிய கணவன்; கர்ப்பிணி மனைவி கண்முன்னே நொடியில் நடந்த துயரம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான செந்தில்குமார். இவரின் மனைவி மோனிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு நத்திஷ்குமார் என்ற பெயரில் இரண்ட... மேலும் பார்க்க

குஜராத்: திடீரென இடிந்து விழுந்த பாலம்; ஆற்றில் விழுந்த வாகனங்கள் - 9 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இ... மேலும் பார்க்க

Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்!

இத்தாலியில், விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவமானது மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில... மேலும் பார்க்க