செய்திகள் :

ஒலிபெருக்கி இல்லாத மும்பை: மசூதி, வழிபாட்டுத்தலங்களில் இருந்த 1,600 ஒலிபெருக்கிகள் அகற்றம்!

post image

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இது குறித்து மாநில சட்டமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர் சுதிர் முங்கந்திவார் எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருந்த 3367 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. மும்பை மசூதிகளில் 1059 ஒலிபெருக்கிகளும், கோயில்களில் 48 ஒலிபெருக்கிகளும், சர்ச்களில் இருந்த 10 ஒலிபெருக்கிகளும், குருத்வாராக்களில் இருந்த 4 ஒலிபெருக்கிகளும், இதர வழிபாட்டுத்தலங்களில் இருந்து 147 ஒலி பெருக்கிகளும் அகற்றப்பட்டுள்ளது. ஒரு வழிபாட்டுத்தலத்தில் கூட ஒலிபெருக்கி கிடையாது. யாராவது ஒலிபெருக்கியை பொருத்த நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்னாவிஸ்

சரியான அனுமதி பெறாமல் யாராவது ஒலிபெருக்கியை பொருத்த நினைத்தால் அப்பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தான் அதற்கு பொறுப்பாகும். இத்திட்டத்தை அமல்படுத்த தேவையான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்'' என்று தெரிவித்தார். சட்டவிரோத ஒலிபெருக்கிகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசு ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்திலும் தாக்கல் செய்யவேண்டும் என்று முங்கந்திவார் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''அனைத்து வழிபாட்டுத்தலங்களில் இருந்தும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படுவதால் ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்திலும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை'' என்று தெரிவித்தார்.

அரசின் நடவடிக்கையை பாராட்டி பேசிய ஆதித்ய தாக்கரே,''ஒலி மாசுவை கட்டுப்படுத்த முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. விழாக்காலங்களில் தற்காலிகமாக ஒலி பெருக்கி பொருத்த அனுமதி கேட்டு வருபவர்களை அரசு துன்புறுத்தக் கூடாது'' என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் பட்னாவிஸ், ``விதிகளை பின்பற்றி சரியான காரணத்திற்காக முறைப்படி அனுமதி கேட்டு வந்தால் அவர்களை போலீஸார் துன்புறுத்த மாட்டார்கள். ஒலி பெருக்கியை அகற்றும் விவகாரத்தில் போலீஸார் செயல் மிகவும் பாராட்ட தக்கது. அவர்கள் வழிபாட்டு கமிட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டி எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஒலிபெருக்கியை அகற்றி இருக்கின்றனர். இதனால் எந்த வித மதபதட்டமும் ஏற்படவில்லை. மும்பையை ஒலிபெருக்கி இல்லாத நகரமாக போலீஸார் மாற்றிவிட்டனர்'' என்றார்.

Skincase: மனித தோல் வடிவில் போன் கவர் உருவாக்கிய விஞ்ஞானிகள் - என்ன காரணம் தெரியுமா?

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் மார்க் டெய்சியர், விர்ஜின் மீடியா O2 உடன் இணைந்து, ஸ்கின்கேஸ் என்ற தொலைபேசி உறையை உருவாக்கியுள்ளார்.இந்த போன் கவர் சூரிய ஒளியில், அதிக யூவி கதிர்கள் வெளிப்படும் போது நிறம் மாற்... மேலும் பார்க்க

Jaipur: 'தினமும் 12 மணி நேரம் படிப்பு; பேத்தியின் உத்வேகம்' - CA தேர்வில் வென்ற 71 வயது முதியவர்!

பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால்... மேலும் பார்க்க

சென்னை: "என்னாச்சு? நீங்க ஓகேதான?" - டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?

சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னையை... மேலும் பார்க்க

Gingee Fort: செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ; சுவாரஸ்ய பின்னணி என்ன?

சத்ரபதி சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரா முழுவதும் கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் இன்றைக்கும் சுற்றுலா மையங்களாகவும், சத்ரபதி சிவாஜியின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.இந்நிலையில் மகார... மேலும் பார்க்க

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற... மேலும் பார்க்க

ஆந்திரா: கடலுக்குச் சென்ற மீனவரை இழுத்துச் சென்ற 200 கிலோ கருப்பு மார்லின் மீன்; என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம்... மேலும் பார்க்க