செய்திகள் :

சென்னை: "என்னாச்சு? நீங்க ஓகேதான?" - டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?

post image

சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையைச் சேர்ந்த ஜனனி பொற்கொடி என்ற பெண், "கடந்த வாரம் நான் சொல்ல முடியாத அளவுக்கு மன அழுத்தத்திலும் இருந்தேன். வேலை அழுத்தம், மன அழுத்தம், எதிர்பார்ப்பு எனப் பல்வேறு விஷயங்கள் என் மனதிற்குள் இருந்தன.

அந்தச் சமயத்தில் ஒரு போக்குவரத்துக் காவலரால் நான் நிறுத்தப்பட்டேன். அதற்கான காரணம் கூட எனக்கு நினைவிற்கு இல்லை...

Traffic signal

ஆனால் அது போக்குவரத்து விதி மீறல் தொடர்பான நிறுத்தமல்ல, அந்தக் காவலர் என்னைப் பார்த்து, என்னாச்சு? எல்லாம் ஓகே தானே? என்று கேட்டார்.

அந்தச் சமயத்தில் யாரோ ஒருவர் உண்மையான அக்கறையுடன் என்னிடம் இப்படிக் கேட்டதால் கண்ணீர் வந்துவிட்டது. எதிர்ப்பாராத அக்கறையில் அந்த நொடியில் நான் பல வாரங்களாக அடக்கி வைத்திருந்த அனைத்து உணர்ச்சிகளும் வெளிவந்து விட்டன.

அந்த மன அழுத்தங்களை விடுவிக்க அந்தக் கேள்வி எனக்கு உதவியாக இருந்தது. அந்த அழகை என்னை லேசாக உணர வைத்தது.

வலிமையாக இருக்க முயன்றாலும் நாம் அனைவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள். இப்படி யாராவது போராடுவதை நீங்கள் கண்டால் ஒரு அன்பான வார்த்தையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் உண்மையில் நன்றாக உணர்ந்தேன்” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தப் பதிவுதான் இணையத்தில் வைரலாகி, ஜனனி பொற்கொடிக்குத் தங்களின் ஆதரவையும் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு நன்றியையும் இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Jaipur: 'தினமும் 12 மணி நேரம் படிப்பு; பேத்தியின் உத்வேகம்' - CA தேர்வில் வென்ற 71 வயது முதியவர்!

பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால்... மேலும் பார்க்க

Gingee Fort: செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ; சுவாரஸ்ய பின்னணி என்ன?

சத்ரபதி சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரா முழுவதும் கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் இன்றைக்கும் சுற்றுலா மையங்களாகவும், சத்ரபதி சிவாஜியின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.இந்நிலையில் மகார... மேலும் பார்க்க

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற... மேலும் பார்க்க

ஆந்திரா: கடலுக்குச் சென்ற மீனவரை இழுத்துச் சென்ற 200 கிலோ கருப்பு மார்லின் மீன்; என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம்... மேலும் பார்க்க

`85,000 ரூபாயா?' - ஒரு பஞ்சாயத்து கூட்டத்தில் சாப்பிடப்பட்ட உணவின் பில் வைரல்! - பின்னணி என்ன?

மத்தியப் பிரதேசத்தின் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் சிற்றுண்டி, பழங்கள் சாப்பிட்டதற்காக 85 ஆயிரம் ரூபாய் உணவு பில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பில் இணையத்தில் வைரலாகி வருகிறது.மத்தியப் பிரதேசத்தின்... மேலும் பார்க்க

"தென்னிந்தியர்களின் டான்ஸ் பார்களால் மகாராஷ்டிர கலாசாரம் கெட்டது" - சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

மும்பையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் இருக்கும் கேண்டீனில் வழங்கப்பட்ட சாப்பாடு தரமானதாக இல்லை என்று கூறி கேண்டீன் உரிமையாளரை சிவசேனா எம்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வ... மேலும் பார்க்க