செய்திகள் :

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

post image

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணையை இன்று(ஜூலை 12) காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது,

உங்களுடைய புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள். மக்களுக்குச் சேவை செய்வதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

தனது அரசு இதுவரை ஏழைகளுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள், 10 கோடிக்கும் மேற்பட்டோர்களுக்கு புதிய எல்பிஜி இணைப்புகள், சூரிய சக்தி திட்டம் எனத் தனது அரசின் நலத்திட்டங்கள் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமான ஆதாரங்கள் இல்லையென்றால் அது நடந்திருக்காது.

உற்பத்தியை அதிகரிப்பதில் தனது அரசு கவனம் செலுத்தி வருகிறது. 11 ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி ஐந்து மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாகவும், மொபைல் உற்பத்தி அலகுகள் இரண்டு முதல் நான்கு மடங்கு வரை கிட்டத்தட்ட 300 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாதுகாப்பு உற்பத்தி பெருமையுடன் விவாதிக்கப்படுகிறது. பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு ரூ. 1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

தனது சமீபத்திய ஐந்து நாடுகளின் சுற்றுப்பயணத்தைப் பற்றிப் பேசிய அவர், முழு உலகமும் இப்போது இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் ஜனநாயகத்தின் வலிமையை அங்கீகரித்துள்ளது. இந்திய இளைஞர்களின் வலிமை அதன் மிகப்பெரிய மூலதனம், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம்.

ரோஜ்கர் மேளாவின் ஒரு பகுதியாக நியமனக் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டன. இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பகுதியாக ரோஜ்கர் மேளா திட்டம் உள்ளது என்று அவர் கூறினார்.

Prime Minister Narendra Modi on Saturday emphasised his government's focus on generating employment in the public and private sectors, asserting that the country has progressed in every field in the past 11 years.

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க