செய்திகள் :

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

post image

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் உள்ளூர் ரயிலில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரது ரயிலிலேயே பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.

இதனைக் கண்ட சக பயணிகள் மும்ப்ரா ரயில் நிலையத்தில் அவசரகால அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனே ஹினா ஆட்டோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

இதைத்தொடர்ந்து ஹினாவின் கணவர் ரயில்வே போலீஸ் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

"எங்கள் பணியாளர்களின் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், அந்தப் பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, இருவரின் உயிர்களும் காப்பாற்றப்பட்டன" என்று கூறி, அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சியை ரயில்வே போலீஸ் அதிகாரி பாராட்டினார்.

Swift action by the Government Railway Police (GRP) helped a 30-year-old woman receive timely medical care at Mumbra in Thane district, resulting in the safe birth of a girl.

இந்தியாவுடன் நட்புறவைக் கெடுக்க முயற்சி! ஈரான் எச்சரிக்கை!

ஈரான் அரசின் பெயரில் போலிக் கணக்குகள் இந்தியாவின் நட்புறவைக் கெடுக்க முயற்சிப்பதாக ஈரான் தூதரகம் எச்சரித்துள்ளது.ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்ததையடுத்து, ஈரான் மீது குண்டும் வீசியது.... மேலும் பார்க்க

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் பலி

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் தீக்காயமடைந்த 2 சிறுவர்களும் சிகிச்சைப் பலனின்றி பலியாகினர். கேரள மாநிலம், வடக்கு பாலக்காடு மாவட்டத்தில் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளிப்பு! காப்பாற்ற முயன்ற மாணவருக்கும் 70% தீக்காயம்!

ஒடிசாவில் ஆசிரியல் பாலியல் தொல்லையளித்ததாக மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள ஃபாகிர் மோகன் கல்லூரியில் ஒரு மாணவிக்கு சமீர்குமார் சாஹு என... மேலும் பார்க்க

சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?

சென்னை கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலத்தின் பின்னணியில் ஆந்திரத்தின் ஜனசேனை கட்சி நிர்வாகியின் கொலை சம்பவம் வெளிவந்துள்ளது.சென்னை கூவம் ஆற்றின் அருகே கடந்த செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 8) மதிக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குக்கு ஏற்பட்டபிறகு, முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன.கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க