செய்திகள் :

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் பலி

post image

கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் தீக்காயமடைந்த 2 சிறுவர்களும் சிகிச்சைப் பலனின்றி பலியாகினர்.

கேரள மாநிலம், வடக்கு பாலக்காடு மாவட்டத்தில் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவர் ஸ்டார்ட் செய்திருக்கிறார். அப்போது அந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் போல்பல்லியைச் சேர்ந்த ஆல்ஃப்ரட் (6) மற்றும் எமிலினா (4) ஆகியோர் பலியாகினர். 60 சதவிகித தீக்காயங்களுடன் தாய் எல்சியும் (39) மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். ஆனால் அவர்களின் நிலை தற்போது மோசமாக இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கார் வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளிப்பு! காப்பாற்ற முயன்ற மாணவருக்கும் 70% தீக்காயம்!

"ஆரம்பத்தில், காரில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் அது பெட்ரோல் கார் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த கார் பழையது என்றும், சிறிது காலமாக பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார். எல்சியின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்மையில் இறந்தார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two children succumbed to the serious burns they suffered a day ago when a car parked in the courtyard of their house exploded and was engulfed in fire in the northern Palakkad district, police said on Saturday.

இந்தியாவுடன் நட்புறவைக் கெடுக்க முயற்சி! ஈரான் எச்சரிக்கை!

ஈரான் அரசின் பெயரில் போலிக் கணக்குகள் இந்தியாவின் நட்புறவைக் கெடுக்க முயற்சிப்பதாக ஈரான் தூதரகம் எச்சரித்துள்ளது.ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்ததையடுத்து, ஈரான் மீது குண்டும் வீசியது.... மேலும் பார்க்க

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளிப்பு! காப்பாற்ற முயன்ற மாணவருக்கும் 70% தீக்காயம்!

ஒடிசாவில் ஆசிரியல் பாலியல் தொல்லையளித்ததாக மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள ஃபாகிர் மோகன் கல்லூரியில் ஒரு மாணவிக்கு சமீர்குமார் சாஹு என... மேலும் பார்க்க

சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?

சென்னை கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலத்தின் பின்னணியில் ஆந்திரத்தின் ஜனசேனை கட்சி நிர்வாகியின் கொலை சம்பவம் வெளிவந்துள்ளது.சென்னை கூவம் ஆற்றின் அருகே கடந்த செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 8) மதிக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குக்கு ஏற்பட்டபிறகு, முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன.கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க