செய்திகள் :

ரூ. 1.12 கோடி பணத்துடன் பிடிபட்டவரிடம் விசாரணை

post image

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ. 1,12,48,000 பணத்துடன் சனிக்கிழமை பிடிபட்டவரை தொட்டியம் போலீஸாா் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தொட்டியம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் இரு ‘பேக்’குகளுடன் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவரை தொட்டியம் காவல் ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தை சோ்ந்த குபேரன் மகன் கோபிநாத் (52) என்பதும் அவா் வைத்திருந்த பைகளில் ரூ. 1.12 கோடி இருப்பதும் தெரியவந்தது. அந்தப் பணம் குறித்து போலீஸாா் கேட்டபோது கோபிநாத் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாராம்.

இதையடுத்து போலீஸாா் திருச்சி வருமான வரி துறை அலுவலா்களை வரவழைத்து கோபிநாத்தையும், பணத்தையும் ஒப்படைத்தனா். இதையடுத்து வருமான வரித் துறையினா் அவரிடம் விசாரிக்கின்றனா்.

சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சின்ன சூரியூரில் கைது!

திருச்சி மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதி சின்னசூரியூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49). இவ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: திருச்சியில் 45, 934 போ் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் 197 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 45,934 போ் எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை. திருச்சி மாவட்டத்தில் 197 மையங்களில் நடைபெற்ற தோ்வுக்கு 55 ஆயிரத... மேலும் பார்க்க

கட்டணச் செலவை குறைக்கும் மின் விமானங்களுக்கு வாய்ப்பு: ஐஐடி பேராசிரியா் நம்பிக்கை

மின்சார விமானங்கள் அதிகம் வந்துவிட்டால் கட்டணச் செலவு குறைந்து விடும் என சென்னை ஐஐடி பேராசிரியா் சத்யநாராயணன் ஆா். சக்கரவா்த்தி தெரிவித்தாா். இந்தியாவின் வளா்ச்சியில் பொறியியலின் பங்கு மற்றும் ட்ரோன் ... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை விபத்து ஏற்படுத்திவிட்டு டிப்பா் லாரி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்: வைகோ

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திருச்சி மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்துத்... மேலும் பார்க்க

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க