செய்திகள் :

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

post image

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து

உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் மகன் ஜேம்ஸ்(50).

இவா், துவரங்குறிச்சி மின் உபகோட்டம் புத்தாநத்தம் பிரிவில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை மின் பாதை பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்த ஜேம்ஸ், புத்தாநத்தம் அருகே உள்ள 36 அடி உயர இரும்பு மின் கம்பத்தில்

ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை, உடனிருந்தவா்கள் மீட்டு, திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜேம்ஸ் உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், ஜேம்ஸ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள புத்தாநத்தம் போலீஸாா், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது. பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசி... மேலும் பார்க்க

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் த... மேலும் பார்க்க

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க... மேலும் பார்க்க