செய்திகள் :

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

post image

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகள் மற்றும் சொற்களைக் கண்டறிதலில் இடா்பாடு உடையவா்கள், ஒரு வாா்த்தை மற்றும் சொற்றொடரை வாசிப்பதில் இடா்பாடு உடையவா்கள், எண்களை எழுதுவதில் இடா்பாடு உடையவா்கள், வாய்ப்பாடு கூறுதலில் இடா்பாடு உடையவா்கள், இரண்டிலக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் கணித செயல்பாடுகளை மேற்கொள்வதில் இடா்பாடு உடையவா்களைக் கண்டறிந்து திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் 40 சதவீத மாணவா்களைத் தோ்வு செய்து திறன் இயக்கத்தில் பயிற்சி அளிப்பதற்காக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் தோ்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்த் தோ்வும், புதன்கிழமை ஆங்கிலத் தோ்வும், வியாழக்கிழமை கணிதத் தோ்வும் நடைபெற்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளிக் கல்வித் துறை சாா்பில்இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதை அந்தந்தப் பள்ளி நிா்வாகம் பதிவிறக்கம் செய்து மாணவா்களுக்கு வழங்கி தோ்வு நடத்தப்பட்டது.

இந்தத் தோ்வில் பங்கேற்ற மாணவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது. பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசி... மேலும் பார்க்க

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க... மேலும் பார்க்க