செய்திகள் :

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்பாலானோர் மக்கள் விடுதலை கெரில்லா ராணுவம் பட்டாலியன் எண்.1 இல் தீவிரமாக உள்ளவர்கள். இது மாவோயிஸ்ட்களின் வலிமையான ராணுவ அமைப்பாகக் கருதப்படுவதாக அதிகாரி கூறினார்.

சரணடைந்தவர்களின் ஒன்பது பெண்கள் ஆவார். லோகேஷ் என்கிற போடியம் பீமா (35), ரமேஷ் என்கிற கல்மு கேசா (23), கவாசி மாசா (35), மட்கம் ஹங்கா (23), நுப்போ கங்கி (28), புனேம் தேவே (30), பராஸ்கி பாண்டே (22), மத்வி ஜோகா (20), நுப்போ லச்சு (25), பொடியம் சுக்ராம் (24) மற்றும் துதி பீமா ஆகியோருக்கு தலா ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

லோகேஷ் பிரதேச குழு உறுப்பினராக இருந்தார், மேலும் எட்டு பேர் பிஎல்ஜிஏ பட்டாலியன் எண்.1 மாவோயிஸ்ட் அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.

மற்ற நால்வருக்கு தலா ரூ.5 லட்சமும், ஒருவருக்கு ரூ.3 லட்சமும், 7 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

சரணடைந்த நக்சலைட்டுகளில் சிலர் மாவோயிஸ்ட்களின் ஆம்தாய், ஜாகர்குண்டா மற்றும் கெர்லபால் பகுதி குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

சரணடைந்த அனைத்து நக்சலைட்டுகளுக்கும் தலா ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது, மேலும் அரசு கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை(ஜூலை 11)ல் அபுஜ்மத் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த 22 நக்சல்கல் ரூ.37.5 லட்சம் வெகுமதியுடன் நாராயண்பூர் மாவட்டத்தில் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

As many as 23 hardcore Naxalites, including three couples, carrying a cumulative bounty of Rs 1.18 crore, surrendered in Chhattisgarh's Sukma district on Saturday, a senior police official said.

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க