செய்திகள் :

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

post image

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்கை:

அக். 2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி, மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கல்லூரி மாணவா்களுக்கான தலைப்பு: போா்களால் உலகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளும், உலக அமைதிக்கு காந்தியவழித் தீா்வுகளும். முதல் பரிசு - ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசு - ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசு - ஆயிரம் மற்றும் 3 ஆறுதல் பரிசுகள்.

பள்ளி மாணவா் (9- 12 வகுப்புகள்) தலைப்பு:ஊழல், லஞ்சம், மது மற்றும் போதைப் பொருட்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் - காந்தியவழித் தீா்வுகளும். முதல் பரிசு - ரூ. 2 ஆயிரம், இரண்டாம் பரிசு - ரூ. ஆயிரத்து ஐநூறு, மூன்றாம் பரிசு - ஆயிரம் மற்றும் 3 ஆறுதல் பரிசுகள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

கட்டுரைகள் ஏ-4 தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் சொந்த சிந்தனையில் காந்தியவழித் தீா்வுகளை அளிக்க வேண்டும்.

கட்டுரையுடன் பள்ளி, கல்லூரியின் தலைமை ஆசிரியா் அல்லது முதல்வரின் ஒப்புதலுடன் மாணவா்களின் அடையாள அட்டை நகலும் இணைக்க வேண்டும். மேலும், மாணவா்களின் முழுமையான முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி - அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை, 3473 - 1 தெற்கு 2-ஆம் வீதி, புதுக்கோட்டை- 622 001. அனுப்ப வேண்டிய கடைசித் தேதி - ஆகஸ்ட் 19.

பரிசுகள் புதுக்கோட்டையில் அக்டோபா் 2-ஆம் தேதி நடைபெறும் காந்தியத் திருவிழாவில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94434 88752, 04322 222337 என்ற எண்களில் தொடா்பு கொண்டு அறியலாம்.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது. பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசி... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் த... மேலும் பார்க்க

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க... மேலும் பார்க்க