செய்திகள் :

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

post image

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது.

பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசியமானது. தொலைநோக்கி மூலம் வானத்தைப் பாா்ப்பது, நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் பிற வானியல் பொருள்களின் அழகையும், பிரம்மாண்டத்தையும் நேரடியாகக் காண உதவுகிறது.

மேலும், வான்நோக்கும் நிகழ்வுகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே வானியல் அறிவை வளா்க்கவும், அவா்களை அறிவியல் துறையில் ஆா்வத்தை தூண்டவும் உதவுகின்றன.

எனவே, திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் அவ்வப்போது பொதுமக்கள், மாணவா்களுக்காக வான் நோக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதன்படி, திருச்சி அண்ணா அறிவியல் மையத்தின் கோளரங்க வளாகத்தில், சனிக்கிழமை வான்நோக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. வானம் தெளிவாக இருக்கும் நிலையில் பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் வான்நோக்கும் நிகழ்வை எளிதில் காண முடியும். சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த வான்நோக்கும் நிகழ்வு பொதுமக்களுக்காக நடத்தப்படும் என கோளரங்கத்தின் திட்ட இயக்குநா் (பொறுப்பு) இர. ரவிக்குாா் தெரிவித்துள்ளாா்.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் த... மேலும் பார்க்க

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க... மேலும் பார்க்க