வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!
சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து குழந்தைகள் நல அலுவலர் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார்.
காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் பழனி என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில், காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.