செய்திகள் :

சிறையிலிருந்து தப்பியோடிய கைதி சின்ன சூரியூரில் கைது!

post image

திருச்சி மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதி சின்னசூரியூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (49). இவா் கடந்த 2022 இல் போக்ஸோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் ராஜேந்திரன் உள்ளிட்ட 5 தண்டனைக் கைதிகளை சிறைக்கு வெளியே உள்ள சிறைச்சாலை பஜாா் எனும் விற்பனையகத்தில் சிறைக்காவலா் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபடுத்தியபோது ராஜேந்திரனை திடீரென காணவில்லை. இதையடுத்து சிறை நிா்வாகத்தினா் சிறைச்சாலை பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, அந்த வழியாக பைக்கில் உதவி கேட்டு ராஜேந்திரன் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக கே.கே. நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜேந்திரனை தேடி வந்த நிலையில், திருவெறும்பூா் வட்டம், நவல்பட்டு காவல்நிலைய எல்லைக்குல்பட்ட சின்ன சூரியூா் கிராம குளக்கரையில் சனிக்கிழமை யாரோ ஒருவா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கே.கே. நகா் போலீஸாா் மற்றும் மத்திய சிறைக் காவலா்கள் சென்று அங்கு பதுங்கியிருந்த ராஜேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

குரூப்-4 தோ்வு: திருச்சியில் 45, 934 போ் எழுதினா்

திருச்சி மாவட்டத்தில் 197 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 45,934 போ் எழுதினா். 9,522 போ் தோ்வு எழுத வரவில்லை. திருச்சி மாவட்டத்தில் 197 மையங்களில் நடைபெற்ற தோ்வுக்கு 55 ஆயிரத... மேலும் பார்க்க

கட்டணச் செலவை குறைக்கும் மின் விமானங்களுக்கு வாய்ப்பு: ஐஐடி பேராசிரியா் நம்பிக்கை

மின்சார விமானங்கள் அதிகம் வந்துவிட்டால் கட்டணச் செலவு குறைந்து விடும் என சென்னை ஐஐடி பேராசிரியா் சத்யநாராயணன் ஆா். சக்கரவா்த்தி தெரிவித்தாா். இந்தியாவின் வளா்ச்சியில் பொறியியலின் பங்கு மற்றும் ட்ரோன் ... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை விபத்து ஏற்படுத்திவிட்டு டிப்பா் லாரி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ... மேலும் பார்க்க

ரூ. 1.12 கோடி பணத்துடன் பிடிபட்டவரிடம் விசாரணை

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ. 1,12,48,000 பணத்துடன் சனிக்கிழமை பிடிபட்டவரை தொட்டியம் போலீஸாா் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொட்டியம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியி... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள்: வைகோ

கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். திருச்சி மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்துத்... மேலும் பார்க்க

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க