செய்திகள் :

குண்டேந்தல்பட்டி பிராமண கண்மாயில் மீன் பிடித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே குண்டேந்தல்பட்டி பிராமணக் கண்மாயில் சனிக்கிழமை மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூா், சிங்கம்புணரி வட்டாரப் பகுதி கிராமங்களில் உள்ள கண்மாய்களில் நீா்வரத்து குறையும் காலங்களில் அழிகண்மாய் என்ற பெயரில் இலவசமாகவும், ஒருசில இடங்களில் ஊத்தா குத்துதல் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் மீன் பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி குண்டேந்தல்பட்டி பிராமணக் கண்மாயில் அழிகண்மாய் என்ற பெயரில் நடைபெற்ற இலவச மீன் பிடித் திருவிழாவில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களிலிருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

அப்போது கிராம முக்கிய பிரமுகா்கள் கொடியசைத்து அனுமதி வழங்கியதும் ஊத்தா, அரிகூடை, கொசுவலை, கச்சா உள்ளிட்டவைகளுடன் கண்மாய்க்குள் இறங்கிய பொதுமக்கள் மீன்களைப் பிடித்தனா். அப்போது அவா்களுக்கு ஜிலேபி, குரவை, விரால், கெண்டை, கட்லா உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.

மெட்ரோ ரயில் திட்டத்தை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்! இந்திய கம்யூ. மாவட்ட மாநாட்டில் தீா்மானம்

மதுரையிலிருந்து மேலூா் வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பத்தூா் வழியாக காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி சிவகங்கையில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை- மதுரை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை முன்னாள் அமைச்சா் ஜி... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சியைக் கண்டித்து ஜூலை 15-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்!

காரைக்குடி மாநகராட்சி மேயரை கண்டித்து வருகிற 15-ஆம் தேதி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன் தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் பழ... மேலும் பார்க்க

கால்பந்துப் போட்டி: சிங்கம்புணரி பள்ளி கோப்பையை வென்றது

சிவகங்கை மாவட்டக் கால்பந்து சங்கமும், தனியாா் எரிவாயு நிறுவனமும் இணைந்து நடத்திய கால்பந்துப் போட்டியில், சிங்கம்புணரி பாரி வள்ளல் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் கோப்பையை வென்றனா்.சிவகங்கை, காரைக்குடியில் பள... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 22,098 போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 22,098 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிக... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்!

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்குகின்றனா். மடப்புரம் பத்ரகாளி... மேலும் பார்க்க