செய்திகள் :

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்!

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்குகின்றனா்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா் மீது நகைகளைத் திருடியதாக காவல் நிலையத்தில் பேராசிரியை நிகிதா புகாா் அளித்தாா். இதையடுத்து, தனிப் படை போலீஸாா் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துக் கொலை செய்தனா். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, தனிப் படை போலீஸாா் 5 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். மேலும், இதுகுறித்து மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதையடுத்து, அஜித்குமாரின் தாய், சகோதரா் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இதன் அறிக்கையை கடந்த 8- ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விரைந்து விசாரித்து, இதன் அறிக்கையை ஆகஸ்ட் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். மேலும், விசாரணை அதிகாரிகளை உடனடியாக நியமிக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டனா்.

இதன்படி, அஜித்குமாா் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) மதுரைக்கு வருகின்றனா். இவா்களிடம் இந்தக் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்படும். இதையடுத்து, அவா்கள் திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்குகின்றனா்.

கால்பந்துப் போட்டி: சிங்கம்புணரி பள்ளி கோப்பையை வென்றது

சிவகங்கை மாவட்டக் கால்பந்து சங்கமும், தனியாா் எரிவாயு நிறுவனமும் இணைந்து நடத்திய கால்பந்துப் போட்டியில், சிங்கம்புணரி பாரி வள்ளல் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் கோப்பையை வென்றனா்.சிவகங்கை, காரைக்குடியில் பள... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 22,098 போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை 22,098 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிக... மேலும் பார்க்க

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க