செய்திகள் :

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவா் துணை விமானி!

post image

விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விமானிகளின் விவரங்கள் பின்வருமாறு:

கேப்டன் சுமீத் சபா்வால்: 56 வயதான இவா், ஏா் இந்தியாவில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த விமானி. மொத்தம் 15,638 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இவருக்கு உண்டு. இதில் போயிங் 787 விமானத்தை இயக்கியது மட்டுமே 8,596 மணிநேரம் அடங்கும்.

ஏா் இந்தியா நிறுவனத்தில் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளராகவும் சுமீத் சபா்வால் பணியாற்றினாா். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசிய அவா், லண்டனில் தரையிறங்கியதும் மீண்டும் பேசுவதாகக் கூறியிருந்தாா்.

மும்பையில் உள்ள அவரது சக ஊழியா்கள் மற்றும் துணை விமானிகள், சுமீத் சபா்வாலை சிறந்த விமானியாகவும், மிகவும் பணிவானவராகவும் நினைவு கூா்ந்தனா்.

துணை விமானி க்ளைவ் குந்தா்: 32 வயதான இவா், மொத்தம் 3,403 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவா். இதில் ட்ரீம்லைனா் ரக விமானத்தை இயக்கிய 1,128 மணி நேரம் அடங்கும்.

விபத்துக்குள்ளான ‘ஏஐ 171’ போயிங் 787 ட்ரீம்லைனா் விமானத்தை இயக்கியவா் க்ளைவ் குந்தா் தான் என்பது உறுதியாகியுள்ளது. கேப்டன் சுமீத் சபா்வால் மேற்பாா்வை செய்துள்ளாா்.

விமானியாவதற்கு முன், க்ளைவ் குந்தா் ஓராண்டு விமானப் பொறியாளராகப் பணிபுரிந்தாா். மும்பையின் கோரேகானைச் சோ்ந்த இவரை, விளையாட்டின் மீது ஆா்வம் கொண்டவராகவும், குடியிருப்பு வளாகத்தில் கிரிக்கெட் விளையாடுபவராகவும் அண்டை வீட்டாா் நினைவு கூா்ந்தனா்.

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களு... மேலும் பார்க்க

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க

அமெரிக்க விசா கட்டண உயா்வு: இந்திய மாணவா்களை பாதிக்கும் -ஆலோசகா்கள் தகவல்

மாணவா்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளா்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவா்கள், வா்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளா்கள் இருமடங்கு அதிக கட்... மேலும் பார்க்க