செய்திகள் :

திருவள்ளூர் ரயில் தீ விபத்து: "பெட்டி தடம் புரண்டதுதான் காரணமா?" - ஆட்சியர் பிரதாப் விளக்கம்

post image

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆயில் ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீப்பற்றி இருக்கிறது.

தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து
திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து

இந்த தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து காலையில் கோவைக்குப் புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, சதாப்தி ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

சென்னை - சென்ட்ரல் மைசூரு இடையே காலையில் இயக்கப்படும் வந்தே பாரத் மற்றும் சதாப்தி ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

சென்னை - பெங்களூரு இடையே இன்று காலை இயக்கப்படும் டபுள் டெக்கர், பிருந்தாவன் ரயில்களும், சென்னை - திருப்பதி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பேட்டி அளித்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், " ஐஓசி மணலியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தீ விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது அதிகாலை 5.20 மணிக்குத் தீப்பிடித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Ahmedabad Plane Crash: "இரவில் திடீர், திடீரென விழித்துக்கொள்கிறார்" -உயிர் தப்பிய நபர் படும் அவஸ்தை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி வளாகக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், விமானத்தில் ... மேலும் பார்க்க

Thiruvallur Train Fire: திருவள்ளூரில் சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து; ரயில் சேவைகள் நிறுத்தம்

சென்னை மணலியிலிருந்து ஜோலார்பேட்டைக்குப் புறப்பட்ட சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீ விபத்துக்குள்ளாகியிருக்கிறது.ரயில்வே நிர்வாகத்தின் முதற்கட்ட தகவலின்படி, ரயில் தடம் புரண்டதால் எரிபொ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'ஏர் இந்தியா இந்த ஆய்வைச் செய்யவில்லை' - முதல்கட்ட அறிக்கை தகவல்

கடந்த ஜூன் 12-ம் தேதி, அகமதாபாத்தில் போயிங் 747 விமான விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்திற்கான முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.எரிவாயுவில் எதாவது பிரச்னையா? விமானத்தில் இருந்து எரிவாயு சுத்தமா... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'அது சரியாக வேலை செய்யவில்லை; காரணம்...' - முதல்கட்ட அறிக்கை சொல்வது என்ன?

அகமதாபாத் விமான விபத்தின் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது விமான விபத்து விசாரணைப் பணியகம்.அந்த அறிக்கையில், "விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இரு இன்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிவாயு நின்றுள்ளது... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது முதல்கட்ட அறிக்கை

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 747 விமான விபத்து கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது. இதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தின் ஆய்வு செய்... மேலும் பார்க்க

Gaur: ``மனித தவறுகளால் மரண வேதனையில் துடிக்கும் காட்டுமாடுகள்'' - வனத்துறை சொல்வதென்ன?

ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமாக அறியப்படும் இந்திய காட்டுமாடுகளின் (Indian Gaur) எண்ணிக்கை நீலகிரியில் கணிசமாக காணப்படுகின்றன. வனங்களில் அந்நிய களைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் மற்றும் வழித்தட... மேலும் பார்க்க