செய்திகள் :

Ahmedabad Plane Crash: "இரவில் திடீர், திடீரென விழித்துக்கொள்கிறார்" -உயிர் தப்பிய நபர் படும் அவஸ்தை

post image

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி வளாகக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணத்தில் 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

உயிர் பிழைத்த அந்த ஒருவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி விஸ்வாஸ் (40 வயது).

Ahmedabad plane crash
Ahmedabad plane crash

அதே சமயம், உயிரிழந்த 241 பேரில் அவரது சகோதரர் அஜய்யும் ஒருவர்.

இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக விஸ்வாஸ் உயிர்பிழைத்திருந்தாலும் அந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அவர் தவிக்கிறார்.

இது குறித்துப் பேசியிருக்கும் விஸ்வாஸின் உறவினர் சன்னி, "வெளிநாட்டில் வசிக்கும் எங்கள் உறவினர்கள் உட்படப் பலரும் விஸ்வாஸ் குறித்து நலம் விசாரிக்க எங்களுக்கு போன் செய்கிறார்கள்.

ஆனால், அவர் யாரிடமும் பேசுவதில்லை. அந்த விபத்து மற்றும் தனது சகோதரரின் மரணத்தால் ஏற்பட்ட மன அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஸ்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் விஸ்வாஸ்

நடு இரவில் திடீர் திடீரென விழித்துக்கொள்கிறார். அதன்பிறகு அவர் மீண்டும் தூங்குவதே கடினமாக இருக்கிறது.

இதற்கு ஒரு தீர்வு காண இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு மனநல மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றோம்.

அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டிருப்பதால், லண்டனுக்குத் திரும்புவதற்கான எந்தத் திட்டமும் இப்போது இல்லை" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருவள்ளூர் ரயில் தீ விபத்து: "பெட்டி தடம் புரண்டதுதான் காரணமா?" - ஆட்சியர் பிரதாப் விளக்கம்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆயில் ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீப்பற்றி இருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் முயற்சி தீ... மேலும் பார்க்க

Thiruvallur Train Fire: திருவள்ளூரில் சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து; ரயில் சேவைகள் நிறுத்தம்

சென்னை மணலியிலிருந்து ஜோலார்பேட்டைக்குப் புறப்பட்ட சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீ விபத்துக்குள்ளாகியிருக்கிறது.ரயில்வே நிர்வாகத்தின் முதற்கட்ட தகவலின்படி, ரயில் தடம் புரண்டதால் எரிபொ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'ஏர் இந்தியா இந்த ஆய்வைச் செய்யவில்லை' - முதல்கட்ட அறிக்கை தகவல்

கடந்த ஜூன் 12-ம் தேதி, அகமதாபாத்தில் போயிங் 747 விமான விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்திற்கான முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.எரிவாயுவில் எதாவது பிரச்னையா? விமானத்தில் இருந்து எரிவாயு சுத்தமா... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'அது சரியாக வேலை செய்யவில்லை; காரணம்...' - முதல்கட்ட அறிக்கை சொல்வது என்ன?

அகமதாபாத் விமான விபத்தின் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது விமான விபத்து விசாரணைப் பணியகம்.அந்த அறிக்கையில், "விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இரு இன்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிவாயு நின்றுள்ளது... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது முதல்கட்ட அறிக்கை

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 747 விமான விபத்து கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது. இதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தின் ஆய்வு செய்... மேலும் பார்க்க

Gaur: ``மனித தவறுகளால் மரண வேதனையில் துடிக்கும் காட்டுமாடுகள்'' - வனத்துறை சொல்வதென்ன?

ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமாக அறியப்படும் இந்திய காட்டுமாடுகளின் (Indian Gaur) எண்ணிக்கை நீலகிரியில் கணிசமாக காணப்படுகின்றன. வனங்களில் அந்நிய களைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் மற்றும் வழித்தட... மேலும் பார்க்க