அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருப்பது ஏன்?: செல்லூர் ராஜு
மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பாக இருப்பதால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேக விழா அன்று மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அவரது மகன் நினைவாக ஆர் ஜே தமிழ்மணி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மதுரை மக்கள், பக்த கோடிகளின் வேண்டுகோள் இது. தமிழகம் முழுவதும் இன்று பேசு பொருளாக இருப்பவர் திருப்பரங்குன்றம் முருகன். திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணம் நடைபெற்றால் மணமக்களுக்கு இடையே பிரிவினை ஏற்படாது என்றார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்று அமித்ஷா கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, கூட்டணி குறித்தும், ஆட்சி அமைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக பதிலளித்துவிட்டார். தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து செயல்படக்கூடியவர் எடப்பாடியார். எடப்பாடியாரின் பயணம் மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகளில் தேக்க நிலை இருப்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பு. அதனால்தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது. மதுரையில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். அதுதான் எங்களுடைய திட்டம். அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறினார்.
சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: 3 தனிப்படைகள் அமைப்பு
The focus of political parties is on Madurai because all parties believe that holding the convention on Madurai soil will bring success.