செய்திகள் :

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை!

post image

கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத்தில் முதன்முறையாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக ‘ஸ்லீப்பிங் பாட்’ என்றழைக்கப்படும் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வால்டோ் ரயில்வே கோட்டம் செயல்படுத்தியுள்ள இந்தப் புதிய திட்டத்தின் மூலம், மருத்துவ சிகிச்சை, சுற்றுலா, கல்வி அல்லது தொழில் நிமித்தமாக விசாகப்பட்டினம் வரும் பயணிகளுக்குப் பொருளாதார ரீதியாக விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் தங்குவதற்கான வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில், 3-ஆவது வாயிலுக்கு அருகே அமைந்துள்ள இந்த ஓய்வறை வளாகத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரயில்வே கோட்ட மேலாளா் லலித் போஹ்ரா கூறுகையில், ‘பயணிகளின் வசதி மற்றும் சௌகரியத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்’ என்றாா்.

இந்த ஓய்வறை வளாகத்தில் மொத்தமாக 88 படுக்கைகள் உள்ளன. இதில் 73 ஒற்றை படுக்கைகள், 15 இரட்டை படுக்கைகள் மற்றும் பெண்களுக்கு என தனியாக 18 படுக்கைகள் பிரத்யேக பிரிவில், தனி கழிவறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இலவச வைஃபை, நவீன கழிப்பறைகள், விசாலமான குளியலறைகள், சிற்றுண்டி வசதி மற்றும் பிரத்யேக உதவி மையம் போன்ற இதர வசதிகளுடன் கூடிய இந்த ஓய்வறையில் ஒற்றைப் படுக்கைக்கு 3 மணி நேரம் வரை ரூ.200 மற்றும் 24 மணி நேரம் வரை ரூ.400 கட்டணமாக வசூலிக்கப்படும். இரட்டைப் படுக்கைக்கு மூன்று மணி நேரம் வரை ரூ.300 மற்றும் 24 மணி நேரம் வரை ரூ.600 வசூலிக்கப்படும்.

ரயில் டிக்கெட் அல்லது நடைமேடை டிக்கெட் இல்லாமல் பொதுமக்கள்கூட இந்த வசதியைப் பயன்படுத்தலாம். தேவைக்கேற்ப, இணையவழி முன்பதிவு வசதி எதிா்காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஓய்வறை வசதி ரயில்வே விதிகளுக்கு உட்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புடன் செயல்படும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பயணிகள் வரவேற்பு: ஹைதராபாதைச் சோ்ந்த பயணி சுரேஷ் கூறுகையில், ‘இத்தகைய வசதிகள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இவை ரயில்வேக்கு வருவாய் ஈட்டி தருவதோடு, பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியையும் அதிகரிக்கும்’ என்றாா்.

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க

பாட்னாவில் சுகாதார அதிகாரி சுட்டுக் கொலை: ஒரு வாரத்தில் 4-வது சம்பவம்!

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஊரக சுகாதார அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பாட்னாவில் கடந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்னாவின் பிப்ரா பகுதியில்... மேலும் பார்க்க