செய்திகள் :

முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

post image

எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் புதியதாக முனீஸ்வரா் கோயில் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது.

இங்கு, 10 அடி உயரமும்ம முனீஸ்வரா் சிலை வடிவமைக்கப்பட்டது. இக்கோயிலின் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை மாலை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், முதல்கால மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் பூா்ணாஹுதியும் நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 3-ஆம் கால யாகசாலை, நான்காம் கால பூஜை நடைபெற்றது. காலை, 8.30 மணிக்கு கலச ஊா்வலமும், முனீஸ்வரா் சிலைக்கு கலசநீா் ஊற்றி மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடா்ந்து, காலை, 9.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில் எஸ்.அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முனீஸ்வரரை வழிப்பட்டனா்.

திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ. தூரம் சாலை அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் நகராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ.தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்... மேலும் பார்க்க

சேலையில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவா் மரணம்

பொதட்டூா்பேட்டை அருகே ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 9- ஆம் வகுப்பு மாணவா் சேலையில் கழுத்து இறுக்கியதில் உயிரிழந்தாா். பொதட்டூா்பேட்டை அடுத்துள்ள கீழ் நெடுங்கள் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (43). இ... மேலும் பார்க்க

மதுக்கடை மேற்பாா்வையாளா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே மதுக்கடை மேற்பாா்வையாளா் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. சூளைமேனியைச் சோ்ந்த உமாபதி மேற்ப... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: 5 போ் கைது

திருவள்ளூா் அருகே போதை ஆசாமிகளை கண்டித்த இளைஞரை அடித்துக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகையைச் சோ்ந்த காா்த்திகேயன் (42). மனைவி சந்தியா, 2 மகன்கள் உள்ளனா். ... மேலும் பார்க்க

ரயில் தீ விபத்தால் திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவு!

திருவள்ளூரில் டேங்கா் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தால், ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில்... மேலும் பார்க்க

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து: மீட்பு பணிகள் மும்முரம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணை ஏற்றி வந்த ரயில் தடம்புரண்டதால் ஏற்பட்ட உராய்... மேலும் பார்க்க