செய்திகள் :

Sneha Debnath: 6 நாள்களுக்குப் பின் யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி.. என்ன நடந்தது?

post image

டெல்லியில் உள்ள ஆத்மராம் சனாதன் தர்மா கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவி ஸ்நேகா தேவ்நாத் (Sneha Debnath) (19) கடந்த ஆறு நாள்களாக காணவில்லை.

அவரது குடும்பத்தினர், இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸாரும் ஸ்நேகாவை தேடி வந்தனர்.

போலீஸாரின் விசாரணையில், ஸ்நேகா டாக்சியில் வடக்கு டெல்லியில் உள்ள சிக்னேச்சர் மேம்பாலத்திற்கு சென்றறுள்ளார். மொபைல் போன் சிக்னலை ஆய்வு செய்தபோதும் அவர் சிக்னேச்சர் மேம்பாலத்திற்கு அருகில்தான் கடைசியாக இருந்துள்ளார். டாக்சி டிரைவர் ஸ்நேகாவை மேம்பாலத்தில் இறக்கிவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, யமுனை ஆற்றில் ஸ்நேகாவை போலீஸார் தேட ஆரம்பித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையும், போலீஸாரும் வடக்கு டெல்லி நிகம் போத் கேட் பகுதியில் இருந்து நொய்டா வரை ஆற்றில் தேட ஆரம்பித்தனர்.

இதில் சிக்னேச்சர் மேம்பாலத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் யமுனை ஆற்றில் ஸ்நேகாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்நேகா கடந்த 7-ம் தேதி காணாமல் போனார். 6 நாள்கள் கழித்து அவரது உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ஸ்நேகா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அவர் குடும்ப பிரச்னையில் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சிக்னேச்சர் மேம்பாலத்தில் அவர் நின்றதை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் காணாமல் போய்விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

டாக்சி டிரைவரும் ஸ்நேகாவை மேம்பாலத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். காணாமல் போன அன்று ஸ்நேகா தனது நெருங்கிய தோழிகளுக்கு இமெயில் அனுப்பி இருக்கிறார். அவரது தோழியிடம் விசாரித்தபோது ஸ்நேகா கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்''என்று தெரிவித்தனர்.

ஆனால் ஸ்நேகாவை யாராவது கடத்தி சென்று இருக்கவேண்டும் என்று அவரது சகோதரி பிபஸ்ஹா தெரிவித்துள்ளார்.

தலைமறைவாக இருந்த பி.ஏ.சி.எல் இயக்குநர் கைது - 5 கோடி மக்களிடம் ரூ.49,000 கோடி மோசடி செய்தது எப்படி?!

இந்தியாவில் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடுகளை பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் எத்தனையோ நடந்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது பி.ஏ.சி.எல் அக்ரோ டெக் கார்ப்ரேசன் செய்த மோசடியாகும். இந்தியாவிலேயே மிக... மேலும் பார்க்க

Sneha Debnath: ``ஒரு CCTV கேமரா கூட வேலை செய்யவில்லையா?'' - உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் கவலை

6 நாட்களுக்கு முன் காணாமல் போன டெல்லி பல்கலைக்கழக மாணவி சினேகா டெப்நாத் (Sneha Debnath), சடலமாக யமுனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார். மாணவி சினேகா திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லி பல... மேலும் பார்க்க

கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந்தவரை மீட்ட போலீஸார்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகின்றனர். கோவையைச் சேர்ந்த பிரப... மேலும் பார்க்க

மகளை கொலை செய்த தந்தை: "மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்" - தி கிரேட் காளி சொல்வதென்ன?

தி கிரேட் காளி என அறியப்படும் தலீப் சிங் ராணா முன்னாள் குத்துச் சண்டை நட்சத்திரமும் பாஜக பிரமுகருமாவார். சமீபத்தில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ் என்ற பெண் அவரது சொந்த தந்தையால் சுட்டுக்கொல்லப்பட... மேலும் பார்க்க

பீகார் பாஜக தலைவர் கொலை; "ஒன்றுக்கும் உதவாத பாஜக துணை முதல்வர்கள் என்ன செய்கிறார்கள்?" - தேஜஸ்வி

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வாரம் தொழிலதிபர் கோபால் கெம்கா என்பவர் தனது காரில் இருந்து இறங்கியபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தற்போது பா.ஜ.க பிரமுகர் சுரேந்திர கேவத் பாட்னாவின் ஷேக்புரா பகுதியில்... மேலும் பார்க்க

சென்னை கூவம் ஆற்றில் கிடந்த இளைஞர் சடலம்; பவன் கல்யாண் கட்சி பெண் நிர்வாகி உட்பட 5 பேர் கைது

கடந்த 8.7.2025 அன்று C3 ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உட்வார்ப் என்ற இடத்தில் (M.S. நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு பின்புறம்) கூவத்தில் ஆண் பிரேதம் ஒன்று மிதப்பதாக பொதுமக்களுடன் வேலா, வ/40, சத... மேலும் பார்க்க