செய்திகள் :

மகளை கொலை செய்த தந்தை: "மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்" - தி கிரேட் காளி சொல்வதென்ன?

post image

தி கிரேட் காளி என அறியப்படும் தலீப் சிங் ராணா முன்னாள் குத்துச் சண்டை நட்சத்திரமும் பாஜக பிரமுகருமாவார். சமீபத்தில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ் என்ற பெண் அவரது சொந்த தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த அதிர்ச்சியையும் தனது கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

rathika yadhav
rathika yadhav

இன்று (13.07.2025) ஃபிட் இந்தியா சன்டேஸ் ஆன் சைக்கில்ஸ் (fit india sundays on cycles) என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், "இந்தியர்கள் ஃபிட்டாக இருப்பது நம் பிரதமரின் கனவு. அப்படியிருந்தால்தான் நம் நாடு விஷ்வ குருவாக இருக்க முடியும். எல்லோரும் குறைந்தது தினசரி ஒரு மணிநேரம் ஆரோக்கியத்துக்கு செலவு செய்ய வேண்டும்." எனப் பேசினார்.

"மகள்கள் மகன்களுக்கு சளைத்தவர்கள் இல்லை" - கிரேட் காளி

ராதிகா யாதவ் கொலை சம்பவம் குறித்து, "ஒரு மனிதர் அவரின் சொந்த மகளையே கொலை செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். நம் மகள்களைக் கொலை செய்தால் எப்படி, 'பேட்டி பச்சோவ், பேட்டி பதோவ் (பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம், கல்வி வழங்குவோம்)' என்ற நோக்கத்தோடு செயல்பட முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், "நம் மகள்களுக்கு ஆதரவளிக்காமல் நாம் விஷ்வகுரு என்ற நிலையை அடைய முடியாது. எனக்கு மகள் இருக்கிறார், மகள்கள் மகன்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை. இது மக்களின் மனநிலையைப் பொறுத்தது... சிலர் தங்களது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லோரும் தங்கள் மகள்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் ஸ்போர்ட்ஸில் ஜொலிக்க ஊக்கமளிக்க வேண்டும்" எனப் பேசினார் காளி.

ராதிகா யாதவ் கொலை:

ஹரியானாவில் உள்ள குருகிராம் நகரில் ராதிகா யாதவ் என்ற 25 வயது பெண் டென்னிஸ் அகாடமி நடத்தி வந்துள்ளார். அதனை மூட வேண்டும் என அவரது தந்தை தொடர்ந்து அறிவுறுத்தியிருக்கிறார். இத்துடன் தந்தைக்கும் மகளுக்கும் வேறு சில கருத்து வேறுபாடுகளும் இருந்துள்ளன.

ராதிகா யாதவ் சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவில் தோன்றியுள்ளார். அதை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது தந்தை அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இதற்கிடையில்தான் கடந்த ஜூலை 10ம் தேதி ராதிகா யாதவின் தந்தை தீபக் யாதவ் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது.

கோவை டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.2.9 கோடி பறிப்பு; தனியறையில் இருந்தவரை மீட்ட போலீஸார்

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகின்றனர். கோவையைச் சேர்ந்த பிரப... மேலும் பார்க்க

பீகார் பாஜக தலைவர் கொலை; "ஒன்றுக்கும் உதவாத பாஜக துணை முதல்வர்கள் என்ன செய்கிறார்கள்?" - தேஜஸ்வி

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த வாரம் தொழிலதிபர் கோபால் கெம்கா என்பவர் தனது காரில் இருந்து இறங்கியபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.தற்போது பா.ஜ.க பிரமுகர் சுரேந்திர கேவத் பாட்னாவின் ஷேக்புரா பகுதியில்... மேலும் பார்க்க

சென்னை கூவம் ஆற்றில் கிடந்த இளைஞர் சடலம்; பவன் கல்யாண் கட்சி பெண் நிர்வாகி உட்பட 5 பேர் கைது

கடந்த 8.7.2025 அன்று C3 ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உட்வார்ப் என்ற இடத்தில் (M.S. நகர் அடுக்குமாடிக் குடியிருப்பு பின்புறம்) கூவத்தில் ஆண் பிரேதம் ஒன்று மிதப்பதாக பொதுமக்களுடன் வேலா, வ/40, சத... மேலும் பார்க்க

தேனி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்..

தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ஜெயலட்சுமி தம்பதியினர். கார்த்திக் தேனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே ஒன்... மேலும் பார்க்க

வத்தலக்குண்டில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட மதுரை ரௌடி; கூட்டாளிகளைக் கைதுசெய்த போலீஸ்!

மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்தவர் பிரபல ரௌடி சிவமணி (30). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சிவமணி தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் கொடைக்கானல் சென்றுள்ளார். நேற... மேலும் பார்க்க

`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிடம் மனு அளித்த தந்தை

திருப்பூர் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமையுடன் உடல் ரீதியாக, மன ரீதியாக கொடுத்த டார்ச்சரால் இந்த... மேலும் பார்க்க