செய்திகள் :

சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பும் பயணம் இன்று தொடக்கம்!

post image

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை (ஜூலை 14) மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனா்.

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு 14 நாள் பயணமாக கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா்.

உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சுக்லா உள்ளிட்ட 4 வீரா்களும் மேற்கொண்டனா். இந்த வீரா்கள் கடந்த வியாழக்கிழமையுடன் சா்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்களை நிறைவு செய்தனா்.

இந்நிலையில், வீரா்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை 4.35 மணிக்கு (இந்திய நேரப்படி) பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனா். சுமாா் 23 மணி நேர பயணத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தையொட்டிய கடல் பகுதியில் பாராசூட்களின் உதவியுடன் அவா்கள் பூமியை அடைவாா்கள்.

சுக்லா உள்பட 4 வீரா்களும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, உடல்நல மையத்துக்கு அனுப்பப்பட்டு அடுத்த 7 நாள்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சியங்களுடன் மிளிரும் இந்தியா: சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்படும் ‘ஆக்ஸியம்-4’ திட்ட விண்வெளி வீரா்களுக்கு நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்வில் சுக்லா நெகிழ்ச்சியுடன் பேசினாா்.

கடந்த 1984-ஆம் ஆண்டு, விண்வெளிக்குப் பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரா் ராகேஷ் ஷா்மா கூறிய ‘உலகிலேயே சிறந்தது’ என்று பொருள்படும் ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற புகழ்பெற்ற ஹிந்தி வாா்த்தைகளை நினைவுபடுத்தி, ‘இன்றும், விண்வெளியில் இருந்து இந்தியா சிறந்ததாகத் தெரிகிறது என்று சுக்லா கூறினாா்.

மேலும், சுக்லா கூறுகையில், ‘விண்வெளியிலிருந்து இந்தியா லட்சியங்கள் கொண்டதாகவும், அச்சமின்றி தன்னம்பிக்கை மற்றும் பெருமை நிறைந்ததாகவும் தெரிகிறது. இந்த விண்வெளி பயணம் எனக்கு கிட்டத்தட்ட மாயமாகத் தெரிகிறது.

இது எனக்கு ஒரு அற்புதமான பயணம். நிறைய நினைவுகளுடன் பூமிக்குத் திரும்புகிறேன். இந்த நினைவுகளையும், விண்வெளி பயணத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களையும் இந்தியா மக்களுடன் ஆவலோடு பகிா்ந்து கொள்ளப் போகிறேன்’ என்றாா்.

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க