செய்திகள் :

வங்கதேசம்: சுதந்திர போராட்ட நினைவுச் சின்னம் தகா்ப்பு

post image

வங்கதேச சுதந்திர போரை பிரதிபலிக்கும் வகையில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டது. இதற்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை நினைவுகூரும் வகையிலான சின்னம் நிறுவப்படவுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வங்கதேச சுதந்திர போா் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிகோரி கடந்த 2013-இல் நடைபெற்ற ஷாபாக் போராட்டத்தின்போது நிறுவப்பட்ட ‘ப்ரோஜன்மோ சத்தாா்’ எனும் நினைவுச் சின்னம் தகா்க்கப்பட்டதாக டாக்கா டிரிப்யூன் செய்தித்தாளில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை ஷாபாக் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி காலித் மன்சூா் உறுதிசெய்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நினைவுச் சின்னத்தை தகா்க்கும் பணிகள் சனிக்கிழமை நள்ளிரவில் ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வீட்டுவசதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான அந்த சின்னம் இடிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

அந்தச் சின்னத்துக்குப் பதிலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் புதிய கட்டமைப்பை நிறுவவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்தது’ என்றாா்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அப்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதில் 1,400 பேருக்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதன்பிறகு வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றாா்.

மியான்மா் எல்லையில் உல்ஃபா முகாம்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல்?

மியான்மா் எல்லையில் உள்ள தங்கள் முகாம்கள் மீது ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணை மூலம் இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியதாக தடைசெய்யப்பட்ட உல்ஃபா(ஐ) தீவிரவாத அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் 5-வது முறை ட்ரோன் தாக்குதல்!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அமைந்துள்ள மிா்யான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடத்தினா். கடந்த ஒரே... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 70 போ் கைது!

பிரிட்டன் விமானப் படை தளத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதையடுத்து, அந்நாட்டு அரசால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட 70-க்கும் ... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சி: அமெரிக்காவின் ரூ.394 கோடி நிதியுதவி நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தடுப்பூசி ஆராய்ச்சிக்கான 46 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.394 கோடி) நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுமாா் 77 லட்சம் போ் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி: 11 மாதங்களில் இல்லாத உச்சம்!

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞா்கள் பணிநீக்கம்!

அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்நாட்டு அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன், அவருக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய நிலையில், ... மேலும் பார்க்க