செய்திகள் :

காஞ்சிபுரம் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து !

post image

காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இத்தொழிற்சாலையில் 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மரப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது மீதமுள்ள மரத்துண்டுகள், உடைந்த பலகைகள் பெரிய அளவில் சேகரிக்கப் பட்டிருந்தன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான மரப் பொருட்கள் சேதம் அடைந்தன.

வதோதராவில் புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி !

வட மாநில தொழிலாளர்கள் சமையல் செய்யும்போது தீப்பொறி பட்டு மரச்சாமான்களில் தீப்பிடித்திருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. சம்பவம் தொடர்பாக பொன்னேரிக் கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

A fire broke out at a furniture manufacturing factory near Kanchipuram early Monday morning.

பிடிவாரண்ட் வழக்குகள் எத்தனை நிலுவை? காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேப்பனப்பள்ளியை அடுத்த பில்லன குப்பம், கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகரைச் சே... மேலும் பார்க்க

வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட... மேலும் பார்க்க

தமிழக எம்.பி.-எம்எல்ஏக்களின் ஊழல் வழக்கு: விவரங்களைக் கோரி தவெக மனு!

தமிழகத்தில் உள்ள எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 5.55 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ... மேலும் பார்க்க

ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்துப்போயிருப்பேன்: வைகோவுக்கு மல்லை சத்யா எதிர்வினை!

ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்துப்போயிருப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா எதிர்வினையாற்றி பதிவிட்டுள்ளார்.மதிமுக முதன்மைச் செயலர் துரை ... மேலும் பார்க்க