செய்திகள் :

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

post image

கிருஷ்ணகிரி அருகே விஷ காய் சாப்பிட்ட 5 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேப்பனப்பள்ளியை அடுத்த பில்லன குப்பம், கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன்கள் அஸ்வின்(5), ஆசூன்(4), அரவிந்த் மகன் ரிஷின்(5), காந்தி மகன் மாலின் (5), கேசவனின் மகன் தர்ஷன் (5) உள்ளிட்ட 5 சிறுவர்கள், வேர்க்கடலை என நினைத்து கொட்டாங்கி என்ற விஷக் கொட்டைகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதனை அறிந்த பெற்றோர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து சிறுவர்களை எம்எல்ஏகள் கேபி முனுசாமி(வேப்பனபள்ளி) கே அசோக் குமார் (கிருஷ்ணகிரி) தே.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களையும், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்

மேலும், குழந்தைகளின் மருத்துவ செலவுகளை தாங்களே ஏற்றுக் கொள்வதாக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் ஆனால் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Five children who ate poisonous fruit near Krishnagiri are receiving treatment in the intensive care unit of the hospital.

பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம்! ஆட்சியர் விசாரணை!

திருவாரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் இருந்தது தொடர்பாக, 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் ஊராட்சி காரியாங்குடியில் அரசு த... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் கார... மேலும் பார்க்க

தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக! பிரேமலதா சுற்றுப்பயணம்!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் ... மேலும் பார்க்க

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி: கமல்

மூத்த நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் இன்று(திங்கள்கிழமை) காலை காலமானார்.பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் வய... மேலும் பார்க்க

பிடிவாரண்ட் வழக்குகள் எத்தனை நிலுவை? காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிம... மேலும் பார்க்க

வாய்ப்பளித்தால் அதிமுகவுடன் நிபந்தனையின்றி இணைப்பு: ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவுடன் உரிமை மீட்புக் குழுவை இணைக்க வாய்ப்பிருந்தால் எந்த நிபந்தனையும் இன்றி இணைவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலின்போது அதிமுக தனித்துப் போட்டியிட்ட... மேலும் பார்க்க