செய்திகள் :

சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

post image

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

''திரைத் துறை ஆளுமை பி. சரோஜா தேவியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்திய சினிமா மற்றும் கலாசாரத்தின் முன்மாதிரியாக என்றும் அவர் நினைவுகூரப்படுவார். அவரின் மாறுபட்ட நடிப்பு தலைமுறைகளைத் தாண்டி அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மொழிகளில் பல்வேறு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அவரின் பணிகள் இருந்தது, இயல்பிலேயே அவரின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. அவரின் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி'' எனப் பதிவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் வாழ்ந்து வந்த சரோஜா தேவி (வயது 87), உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூலை 14) காலமானார்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரருமான நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | நாளை நடிகை சரோஜா தேவி இறுதிச் சடங்கு!

Prime Minister Narendra Modi has condoled the death of veteran actress Saroja Devi.

கொல்கத்தா மருத்துவமனை ஊழல் வழக்கு: ஜூலை 22முதல் நீதிமன்ற விசாரணை தொடக்கம் - சிபிஐ

கொல்கத்தா: கொல்கத்தாவிலுள்ள ஆர். ஜி. கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இளநிலை பெண் மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா... மேலும் பார்க்க

நச்சு வாயுவை பிரித்தெடுப்பதில் இருந்து 78% அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு!

நச்சுத்தன்மை வாய்ந்த துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவுவதில் இருந்து நாட்டின் 78% அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.அனல் மின் நிலையங்களில், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொரு... மேலும் பார்க்க

நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சி: கேரள இஸ்லாமிய தலைவர் யேமன் தலைவர்களுடன் பேச்சு

திருவனந்தபுரம்: கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்ப... மேலும் பார்க்க

விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் பிரிவதில் தாமதம்

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையம் சென்றிருந்த இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை (ஜூலை 14) மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயண... மேலும் பார்க்க

திருப்பதி அருகே விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற ஹிசார் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. திருப்பதி ரயில்நிலையத்துக்கு அருகே ஹிசாரிலிருந்து இருந்து திருப்பதி சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விப... மேலும் பார்க்க

யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரைக் காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா குடும்பத்தினர் முயற்றி மேற்கொண்டுள்ளனர... மேலும் பார்க்க