செய்திகள் :

நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சி: கேரள இஸ்லாமிய தலைவர் யேமன் தலைவர்களுடன் பேச்சு

post image

திருவனந்தபுரம்: கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவர் யேமனில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை தொடர்புகொண்டு நிமிஷாவுக்கான தண்டனையை மாற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யேமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பிலுள்ள யேமன் தலைவர்களுடன் கேரளத்தின் மஸ்லியார் பேச்சு நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவுகள் குறித்து செவிலியரின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் விதிக்கும் பணத்தை செலுத்தினால் தண்டனையிலிருந்து குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட விவரங்கள் நிமிஷாவின் குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், மஸ்லியார் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

செவிலியரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் பலனிக்காமல் பொனால், அதைத்தாண்டி வேறெந்த முயற்சிகளையும் அரசால் செய்ய இயலாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

ஜூலை 16-இல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று யேமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 48 மணி நேரத்துக்கும் குறைவான கால அவகாசமே இருப்பதால், முஸ்லிம் தலைவர்கள் அளவிலான பேச்சு பலனளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கொல்கத்தா மருத்துவமனை ஊழல் வழக்கு: ஜூலை 22முதல் நீதிமன்ற விசாரணை தொடக்கம் - சிபிஐ

கொல்கத்தா: கொல்கத்தாவிலுள்ள ஆர். ஜி. கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இளநிலை பெண் மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா... மேலும் பார்க்க

நச்சு வாயுவை பிரித்தெடுப்பதில் இருந்து 78% அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு!

நச்சுத்தன்மை வாய்ந்த துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவுவதில் இருந்து நாட்டின் 78% அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.அனல் மின் நிலையங்களில், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொரு... மேலும் பார்க்க

சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,''திரைத் துறை ஆளுமை பி. சரோஜா தேவியின் மறைவு வருத்த... மேலும் பார்க்க

விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் பிரிவதில் தாமதம்

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையம் சென்றிருந்த இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை (ஜூலை 14) மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயண... மேலும் பார்க்க

திருப்பதி அருகே விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற ஹிசார் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. திருப்பதி ரயில்நிலையத்துக்கு அருகே ஹிசாரிலிருந்து இருந்து திருப்பதி சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விப... மேலும் பார்க்க

யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரைக் காப்பாற்ற பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா குடும்பத்தினர் முயற்றி மேற்கொண்டுள்ளனர... மேலும் பார்க்க