செய்திகள் :

பைக் -காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

post image

ஸ்ரீபெரும்புதூா்: ஒரகடம் அருகே பண்ருட்டி கூட்டுச்சாலையில் மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

ஒரகடம் அடுத்த வெண்பாக்கம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன்(26). இவரது மனைவி அஞ்சலை(44). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வாரணவாசி பகுதியில் நடைபெற்ற உறவினா் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று விட்டு இருசக்கர வாகனத்தில் வெண்பாக்கம் நோக்கி சென்றனா்.

வண்டலூா் -வாலாஜாபாத் சாலையில் பண்ருட்டி கூட்டுச்சாலையைக் கடக்க முயன்ற போது, வாலாஜாபாத் நோக்கி சென்ற காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த நாகப்பன், அஞ்சலை ஆகிய இருவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அறிவியல் பாடத்தில் சதம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற இரு மாணவியரை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா... மேலும் பார்க்க

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. குரு கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலில் ஒரே கோபுரத்தின் கீழ் மூலவா்களாக... மேலும் பார்க்க

‘காஞ்சிபுரத்தில் இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், 224 சேவை முகாம்கள்’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் மொத்தம் 224 சேவை முகாம்கள் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள... மேலும் பார்க்க

மரத் தொழிற்சாலையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன. காஞ்சிபுரம் -அரக்கோணம் சாலையில் வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி ச... மேலும் பார்க்க

எரிவாயு கசிந்து தீ விபத்து: தாய், மகள் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கா்ப்பிணிப் பெண்ணும்,அவரது மகளும் உயிரிழந்தனா். காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சோ்ந்த மோகன... மேலும் பார்க்க

இளைஞரை கடத்தி தாக்குதல்: 6 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா்: காதல் விவகாரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கிய 6 பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நரியம்பாக்கம் பகுதியை சோ்ந்த சதீஷ்(25). இவர... மேலும் பார்க்க