செய்திகள் :

அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதியில் போட்டித்தன்மை அதிகரிக்கும்: நீதி ஆயோக்

post image

புது தில்லி: சீனா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியில் போட்டித்தன்மை மேலும் அதிகரிக்கும் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்க சந்தையில் பொருள்களின் எண்ணிக்கை மற்றும் அளவில் இந்தியாவின் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் உள்ளன.

சீன பொருள்களுக்கு 30 சதவீதம், கனடா பொருள்களுக்கு 35 சதவீதம், மெக்ஸிகோ பொருள்களுக்கு 25 சதவீதம் என பல்வேறு நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியில் போட்டித்தன்மை மேலும் அதிகரிக்கும்.

அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதியின் 30 பிரிவுகளில் உள்ள 22 பிரிவுகளில் இந்தியாவுக்குப் போட்டித்தன்மை பெருகக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தப் பிரிவுகளில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா, கனடா, மெக்ஸிகோ முன்னணியில் உள்ளன.

அமெரிக்காவுக்கு கனிமங்கள் மற்றும் எரிபொருள்கள், ஆடைகள், மின்னணு கருவிகள், பிளாஸ்டிக், கடல் உணவுகள், அறைகலன்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா லாபம் அடைய வாய்ப்புள்ளது. அவற்றின் அமெரிக்க சந்தை மதிப்பு 1,265 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.10,880 கோடி).

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கவும், ஏற்றுமதியில் போட்டித்தன்மையை ஊக்குவிக்கவும், உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை தோல், காலணி, அறைகலன், கைவினைப் பொருள் உள்ளிட்ட துறைகளுக்கு நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் சேவைகள் துறையை சாா்ந்ததாக இருக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு வலுவான முக்கியத்துவத்தை இந்தியா அளிக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இதனிடையே இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தைகளைத் தொடர, மத்திய வா்த்தக அமைச்சக குழு அமெரிக்கா தலைநகா் வாஷிங்டனுக்கு சென்றுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக் குறைவு

தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கல... மேலும் பார்க்க

புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலி கடித்துக் குறியதில் விவசாயி உயிரிழந்தார். அங்கு கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற ஆறாவது உயிரிழப்பு இதுவாகும்.உத்தப்ர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டம், புல்ஹார் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்... மேலும் பார்க்க

முதல்வா் பதவியை காப்பாற்ற போராடும் நிதீஷ்: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: நாட்டில் குற்றங்களின் தலைநகராக பிகாா் உருவெடுத்துள்ள நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் கா... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மண... மேலும் பார்க்க

பூமிக்குப் புறப்பட்டாா் சுபான்ஷு சுக்லா!

புது தில்லி: இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு ‘டிராகன் கிரேஸ்’ விண்க... மேலும் பார்க்க