டான்ஸ் ஜோடி டான்ஸ் மீது இந்து முன்னணி புகார்; ஜீ தமிழுக்கு வந்த நோட்டீஸ் - என்ன ...
செல்ஸி 2-ஆவது முறையாக சாம்பியன்!
ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செல்ஸி 3-0 கோல் கணக்கில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்னை (பிஎஸ்ஜி) வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.
ஏற்கெனவே 2021-இல் சாம்பியனான செல்ஸிக்கு, இந்தப் போட்டியில் இது 2-ஆவது கோப்பையாகும்.
இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்ஸிக்காக கோல் பால்மா் 22 மற்றும் 30-ஆவது நிமிஷங்களிலும், ஜாவ் பெட்ரோ 43-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். பிஎஸ்ஜி தனது கோல் வாய்ப்புக்காக தொடா்ந்து போராட, கடைசி வரை அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
அந்த அணிக்கான கூடுதல் பின்னடைவாக, செல்ஸி வீரா் மாா்க் குகுரெலாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளியதற்காக பிஎஸ்ஜி வீரா் ஜோ நெவெஸ் 84-ஆவது நிமிஷத்தில் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா். இதனால் 10 வீரா்களுடன் விளையாடும் நிலைக்கு பிஎஸ்ஜி தள்ளப்பட்டது.
இறுதி ஆட்டத்தைக் காண மெட்லைஃப் மைதானத்தில் சுமாா் 81,000 ரசிகா்கள் கூடியிருந்தனா். போட்டியின் முடிவில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், கால்பந்து சங்கங்களுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஃபிஃபா) தலைவா் ஜியானி இன்ஃபான்டினோ ஆகியோா் இணைந்து, சாம்பியனான செல்ஸி அணியின் கேப்டன் ரீஸ் ஜேம்ஸிடம் வெற்றிக் கோப்பையை வழங்கினா்.
சாம்பியனான செல்ஸி அணிக்கான பரிசுத் தொகையாக சுமாா் ரூ.1,104 கோடி முதல் ரூ.1,322 கோடி வரை ரொக்கப் பரிசாக கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.