செய்திகள் :

புலி தாக்கி விவசாயி உயிரிழப்பு

post image

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலி கடித்துக் குறியதில் விவசாயி உயிரிழந்தார். அங்கு கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற ஆறாவது உயிரிழப்பு இதுவாகும்.

உத்தப்ர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டம், புல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தயாராம் (39). அவர் திங்கள்கிழமை காலை தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டு, தான் கரும்பு பயிரிட்டுள்ள வயல்வெளியைப் பார்க்கச் சென்றார். அப்போது அங்கு பதுங்கியிகுந்த ஒரு புலி அவர்மீது பாய்ந்து அவரை கடித்துக்குதறியது.

அவரது கழுத்துமீதும் மார்புமீதும் தாக்குதல் நடத்திய புலி அவரை சுமார் 20 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றது. இதில் படுகாயமடைந்த தயாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக அவரது அலறல் கேட்டு அவரைக் காப்பாற்ற சில கிராமவாசிகள் ஓடி வந்தனர். எனினும் அவர்கள் வந்துசேர்வதற்குள் தயாராம் உயிரிழந்தார். அங்கு திரண்ட கூட்டத்தினரைக் கண்டு அப்புலி தப்பியோடிவிட்டது. விவசாயி தயாராமின் உயிரிழப்பை வட்டார வன அதிகாரி பரத்குமார் உறுதிப்படுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புலி தாக்கி விவசாயி தயாராம் உயிரிழந்தது அந்த கிராமவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் புலிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த வனத்துறை தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உயிரிழந்த தயாராமின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவரைத் தாக்கிய புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்றும் கிராமவாசிகள் கோரியுள்ளனர்.

இந்தப் பகுதியில் தொடர்ந்து புலிகளின் நடமாட்டம் இருப்ப தாக வனத் துறையினர் மற்றும் போலீஸாரிடம் கிராமவாசிகள் தெரிவித்தனர்.

வனத்துறையிடம் இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். பிலிபிட் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் புலி தாக்குதலில் உயிரிழந்த ஆறாவது நபர் விவசாயி தயாராம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இதே மாவட்டத் தில் உள்ள விவசாயி ஹன்ஸ்ராஜ் என்பவர் மே 14-ஆம் தேதியும். நான்கு தினங்கள் கழித்து ராம்பி ரசாத் என்பவர், லாங்ஸ்ரீ என்ற பெண் மே 25-ஆம் தேதியும். ரேஷ்மா என்ற பெண் ஜூன் 3-ஆம் தேதியும், ஒரு விவசாயி ஜூன் 9-ஆம் தேதியும் புலிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இதனிடையே, புலிதாக்கி உயிரிழந்த விவசாயி தயாராமின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக் குறைவு

தீவிர தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் ஹைதராபாதில் உள்ள நல்சார் சட்டப் பல்கல... மேலும் பார்க்க

மக்களவை எம்.பி.க்கள் வருகை பதிவுக்குப் புதிய முறை: மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம்

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘மக்களவை எம்.பி.க்கள் தங்... மேலும் பார்க்க

முதல்வா் பதவியை காப்பாற்ற போராடும் நிதீஷ்: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: நாட்டில் குற்றங்களின் தலைநகராக பிகாா் உருவெடுத்துள்ள நிலையில், முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் கா... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மண... மேலும் பார்க்க

பூமிக்குப் புறப்பட்டாா் சுபான்ஷு சுக்லா!

புது தில்லி: இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மற்றும் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தின் மற்ற 3 விண்வெளி வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு ‘டிராகன் கிரேஸ்’ விண்க... மேலும் பார்க்க

போலி, கலப்பட உரங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான, கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அம... மேலும் பார்க்க